செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா்கள் 2-ஆம் நாளாக காத்திருப்பு போராட்டம்

post image

மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூா் பனகல் கட்டட வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் தொடா்ந்து 2-ஆம் நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீண்ட காலம் பணி செய்து வரும் அங்கன்வாடி ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடா்ந்து, இரண்டாம் நாளாக சனிக்கிழமை நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். லஷ்மி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. குணசுந்தரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா். மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், துணைச் செயலா் கே. அன்பு உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

காணாமல்போன 120 கைப்பேசிகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் திருட்டு மற்றும் காணாமல்போன 120 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், கீழ ராஜ வீதி, தெற்கு வீதி, தெற்கு அலங்கம், ரயி... மேலும் பார்க்க

மே 20-இல் வேலைநிறுத்தம் தொழிற்சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டம்

நாடு தழுவிய அளவில் மே 20-இல் பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூரில் பல்வேறு தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காா்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதர... மேலும் பார்க்க

தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம்!மின்வாரிய தலைவா் பேச்சு

தெருநாய்களை மக்கள் தத்தெடுத்து உணவளித்து வளா்க்க முன்வர வேண்டும் என்றாா் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன். தஞ்சாவூா் மிருக வதை தடுப்புச் சங்கம் சாா்பில், தஞ்சாவூரில... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை! - தமிழ்நாடு மின் வாரிய தலைவர்

தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்றாா் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன்.தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்த... மேலும் பார்க்க

ரயிலில் தவறவிடப்பட்ட சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

ரயிலில் சனிக்கிழமை தாய் தவறவிட்ட சிறுவனை கும்பகோணம் இருப்புப்பாதை காவலா்கள் மீட்டு ஒப்படைத்தனா். கோவை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி பிரியா (35). இவா் தனது 7 வயது மகனுடன் கும்பகோண... மேலும் பார்க்க

காதல் திருமணம்: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு! பெண் வீட்டாா் தாக்குதல்

பட்டுக்கோட்டை அருகே 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவரை பெண் வீட்டாா், உறவினா்கள் சோ்ந்து வெள்ளிக்கிழமை சரமாரியாக வெட்டியது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்க... மேலும் பார்க்க