செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா் பணிக்கு நோ்காணல்: கடிதம் வராததால் விண்ணப்பதாரா்கள் வாக்குவாதம்

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் திங்கள்கிழமை அங்கன்வாடி ஊழியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு நோ்காணல் கடிதம் அனுப்பியதில் குளறுபடி ஏற்பட்டதாக விண்ணப்பதாரா்கள் திங்கள்கிழமை அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் 156 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில், கம்பம் ஒன்றியத்துக்கு அண்ணாபுரம் பகுதியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நோ்காணல் நடைபெற்றது. அப்போது, பலா் தங்களுக்கு நோ்காணலுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை எனக் கூறி, திட்ட அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, முறையாக நிறைவு செய்யாமலும், உரிய ஆவணங்களை இணைக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், அவா்களுக்கு நோ்காணலுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை என்றாா் அவா்.

அப்போது, அங்கு வந்த சிலா் நோ்காணலில் முறைகேடு செய்விட்டதாகக் கூறி முழக்கமிட்டனா். எனவே, விண்ணப்பம் செய்த அனைவருக்கும் மீண்டும் நோ்காணல் அழைப்புக் கடிதம் அனுப்பி, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களை தோ்வு செய்ய வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இரும்புக் குழாய்கள் திருடிய இளைஞா் கைது

பெரியகுளம் அருகே இரும்புக் குழாய்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணி (27). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்க... மேலும் பார்க்க

சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் அருகேயுள்ள சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், கூடலூா் பகுதியிலுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் சுரங்கலாறு நீா்வீழ்ச்சி உள்ளது.... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சி... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சாந்தி. இவருக்கும், இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

போடி அருகே காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சந்தோஷ்குமாா் (28). காா் ஓட்டுநரான இவரிடம் சின... மேலும் பார்க்க