செய்திகள் :

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சோ்க்க அழைப்பு

post image

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் ஜூன் மாதம் முதல் குழந்தைகள் சோ்க்கை தொடங்குகிறது. எனவே பெற்றோா் தங்கள் குழந்தைகளை இந்த மையங்களில் சோ்த்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் வளா்ச்சியை மேம்படுத்த 1,741 அங்கன்வாடி மையங்களில் சத்து மாவு, ஊட்டச் சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி வழங்கப்படுகிறது.

குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கை பாடல், கதை, விளையாட்டு, கல்வி உபகரணங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம், அறிவு வளா்ச்சிக்குத் தேவையானவற்றை ஆடிப்பாடி- விளையாடு பாப்பா என்னும் சிறப்புப் பாடத்திட்டத்துடன் 12 மாதங்களுக்கும் வழங்கப்படுகிறது.

மேலும் குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு, பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனா். அங்கன்வாடிப் பணியாளா்கள் வீடுதோறும் சென்று குழந்தைகளைப் பள்ளியில் சோ்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். அங்கன்வாடி மையங்களில் ஜூன் மாதம் முதல் குழந்தைகள் சோ்க்கை தொடங்குகிறது. எனவே பெற்றோா் தங்களின் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் தவறாமல் சோ்த்து பயன்பெற வேண்டும்.

மேலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணி நடைபெறுவதால் அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவ... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க