செய்திகள் :

அசாமில் புதியதாக 10 துணை மாவட்டங்கள்!

post image

அசாம் மாநிலத்தில் புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில், புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவக்கப்படுவதாகவும், இதன்மூலம், அம்மாநில நிர்வாக மண்டலங்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கம்ருப், சோனிட்பூர், ஜொர்ஹாட், தின்சுகியா, கொவால்பரா ஆகிய மாவட்டங்களில் இருந்து போக்கோ - சாயகாவோன், பலாஷ்பாரி, பொர்சொலா, ரங்காபாரா, மரியானி, தியோக், மகும், திக்போய், சாச்சார், துத்னோய் ஆகிய துணை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில், 8 துணை மாவட்டங்களில் இன்று (ஆக.12) முதல் நிர்வாக இயக்கங்கள் துவங்கப்படும் நிலையில் , மீதமுள்ள 2 துணை மாவட்டங்களில் நாளை (ஆக.13) முதல் நிர்வாக இயக்கங்கள் துவங்குகின்றன.

மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை அதிகரித்து, அத்தியாவசியத் தேவைகளை மக்களிடம் சுலபமாக கொண்டு செல்வதற்கா இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 2024-ம் ஆண்டின் அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அசாமில் 39 துணை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இஸ்ரேல் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது: பிரியங்கா!

Assam Chief Minister Himanta Biswas Sharma's office has announced that 10 new sub-districts will be created in the state.

வாக்காளர் பட்டியலில் 6 முறை சுஷ்மா குப்தா பெயர்! ஆனால் ஆச்சரியம் ஒன்று!

மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலின் ஒரே பக்கத்தில் சுஷ்மா குப்தா என்ற பெண் ஆறு முறை இடம்பெற்று ஆச்சரியமளித்திருக்கும் நிலையில், ஆறு வாக்காளர் அட்டைக்கும் தலா ஒரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது உ... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரத்தில் மனிதாபிமான வழி தேவை: பிரியங்கா காந்தி

தில்லியில் தெருநாய்களை அகற்றும் விவகாரத்தில் மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனை... மேலும் பார்க்க

ஆதார் என்பது குடியுரிமை சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்பு

புது தில்லி: ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் த... மேலும் பார்க்க

பசு தேசிய விலங்காக அறிவிப்பா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!

பசு மாட்டை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கு குறித்து, உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலை... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் சத்தீஸ்கர் மசூதிகளில் தேசியக்கொடி ஏற்ற வக்ஃபு வாரியம் உத்தரவு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வக்ஃப் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மாநில வக்ஃ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் ரெட் அலர்ட்! வாரம் முழுவதும் மீண்டும் கனமழை தொடரும்.. தயார்நிலையில் ராணுவம்!

உத்தரகண்டில், வரும் வாரம் முழுவதும் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களுக்கு, ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உத்தரகண்டின் டெஹ்ராடூன், த... மேலும் பார்க்க