செய்திகள் :

அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

post image

அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களுடன் இன்று (ஜூன் 20) நடைபெற்ற சந்திப்பில் பேசிய அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, சுமார் 47 நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட தலைவருக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.

இதில், பெரும்பாலான கணக்குகள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

”அந்த வலைதள கணக்குகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் பதிவுகளில் எந்தவொரு ஈடுபாடும் காட்டவில்லை. அந்த கணக்குகள், ஒரு குறிப்பிட்ட தலைவர் மற்றும் அசாம் மாநில காங்கிரஸின் செயல்பாடுகளின் மீது மட்டுமே கவனம் செலுத்தியுள்ளன” என்று அவர் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்தக் கணக்குகள், பாலஸ்தீனம், ஈரான் ஆகிய நாடுகளையும் மற்றும் வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் என்பவரையும் ஆதரித்து இஸ்லாமிய அடிப்படைவாதப் பதிவுகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், முதல்வர் சர்மா, அந்த காங்கிரஸ் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் குறிப்பிடுவது கடந்த சில நாள்களுக்கு முன்பு அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ் கோகோய்தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வரும் 2026 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், முதல்முறையாக அம்மாநில அரசியலில் வெளிநாடுகளின் ஈடுபாடு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்றும் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார்.

இதையும் படிக்க:தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க