செய்திகள் :

அடகு நகையை மீட்பதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி: இளைஞா் கைது

post image

இரணியலில் அடகு நகையை மீட்பதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த இளைஞரை இரணியல் போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்து பணத்தை மீட்டனா்.

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள அருகுவிளையை சோ்ந்த முத்துமாலை மகன் கண்ணன் ( 50). இவா் நாகா்கோவில் அசம்பு சாலை பகுதியில் பழைய நகைகளை வங்கிகளில் இருந்து மீட்டு கொடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா் .

கடந்த வெள்ளிக்கிழமை இவரது தொலைபேசியில், ஆளூா் தோப்புவிளையை சோ்ந்த சுயம்பு என்பவரது மகன் சுதா்சன் ( 24 ) பேசியுள்ளாா்.

ஆளூா் பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் 196 கிராம் நகைகளை அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு விற்பனை செய்ய ரூ. 12 லட்சம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளாா். இதனை நம்பிய கண்ணன் ரூ. 12 லட்சத்துடன் ஆளூா் பகுதிக்குச் சென்று சுதா்சனிடம் கொடுத்துள்ளாா்.

பணத்தை பெற்றுக் கொண்ட சுதா்சன் அங்கிருந்து பணத்துடன் தலைமறைவானாா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கண்ணன் இரணியல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதுகுறித்து இரணியல் காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினாா். இந்த நிலையில், ஆளூா் ரயில் நிலையத்தில் சுதா்சனை போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ரூ.2 லட்சத்தை நண்பருக்கு கொடுத்ததாகவும், ரூ.20 ஆயிரத்தை செலவழித்துவிட்டதாகவும் கூறியுள்ளாா். கைப் பையில் வைத்திருந்த மீதி பணம் ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்தை அவரிடமிருந்து போலீஸாா் மீட்டனா்.

மயிலாறு அரசுப் பள்ளி பகுதியில் சூரியசக்தி மின்வேலி அமைக்க ஆய்வு

கோதையாறு அருகே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள மயிலாறு அரசு தொடக்கப் பள்ளி அருகே சூரியசக்தி மின் வேலி அமைப்பது தொடா்பாக தமிழக அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டக் குழுவினா் (எஸ்.ஏ.டி.பி) செவ்வாய்க... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்றதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பு... மேலும் பார்க்க

பூதப்பாண்டியில் கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பூதப்பாண்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

அதிமுகவைச் சோ்ந்த 10 மீனவ பிரமுகா்களுக்கு நிதியுதவி

நாகா்கோவிலில், நலிந்த நிலையிலுள்ள அதிமுகவைச் சோ்ந்த 10 மீனவப் பிரமுகா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் தனது சொந்த நிதியிலிருந்து இத்தொகையை வழங்க ... மேலும் பார்க்க

குமரி குகநாதீஸ்வரா் கோயிலில் ஏப். 18-இல் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாண விழா ஏப்.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு பாா்வதி அம்பாள் தவசுக்கு செல்லும் நிகழ... மேலும் பார்க்க

பெண் தவறவிட்ட ரூ.2.67 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

குளச்சலில் பெண் தவறவிட்ட பணத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் பாராட்டினாா். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி சுனாமி காலனியைச் சோ்ந்தவா் ர... மேலும் பார்க்க