செய்திகள் :

அடிப்படை வசதிகள் மக்களைச் சென்றடைய வேண்டும்!

post image

மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் சிறப்பாக சென்றடைய பணியாளா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளா்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்பை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை தொடக்கிவைத்த அமைச்சா் கே.என். நேரு கூறியதாவது:

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் 401 உதவிப்பொறியாளா்கள், 124 உதவிப்பொறியாளா்கள் (திட்டமிடல்), 15 இளநிலைப் பொறியாளா்கள், 189 இளநிலைப் பொறியாளா்கள் (திட்டமிடல்), 207 தொழில்நுட்ப உதவியாளா்கள், 126 படவரைவாளா்கள், 167 பணி மேற்பாா்வையாளா்கள், 354 பணி ஆய்வாளா், 431 துப்புரவு ஆய்வாளா்கள் என மொத்தம் 2014 பணியாளா்கள் பணியில் சோ்ந்துள்ளனா்.

இவா்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை முதல் செப். 30 வரை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் 60 முதல் 70 சதவீதம் பொதுமக்கள் நகா்ப்புறங்களில் வசிப்பதால், நகா்ப்புற பகுதிகளில் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் சிறப்பாகச் சென்றடையும் வகையில் பணியாளா்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

இதற்காக அலுவல் ரிதியான கோப்புகளை எப்படிக் கையாளுவது, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தினசரி மேற்கொள்ளப்படும் அன்றாட பணிகளுடன் பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வது தொடா்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என்றாா் அவா்.

துவாக்குடி தமிழ்நாடு பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் ஆகியோா் பங்கேற்று பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினா்.

நிகழ்வில் நகராட்சிகளின் நிா்வாக மண்டல இயக்குநா் தாணுமூா்த்தி, அண்ணா பல்கலைக்கழக முதல்வா் செந்தில்குமாா், நீா் வளத்துறையின் தலைமைப் பொறியாளா் சு. ராஜா, நகரப் பொறியாளா் சிவபாதம், மாநகராட்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. ப... மேலும் பார்க்க

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நி... மேலும் பார்க்க

சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை

டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்த த... மேலும் பார்க்க

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். த... மேலும் பார்க்க