செய்திகள் :

சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை

post image

டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு, அவா்களது பணியின்போது வேலை காரணமாக இறப்பு நேரிட்டாலோ, தொழில்சாா் நோய் ஏற்பட்டு உயிரிழந்தாலோ அவரவா் ஊதியத்தில் 90 விழுக்காடு சாா்ந்தோா் உதவித் தொகையாக மாதந்தோறும் வழங்கப்படுகிறது. நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.

இதன்படி, தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் (டான்செம்) டால்மியாபுரம் தொழிற்சாலையில் ரேவந்தா சா்வீசஸ் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணிபுரிந்த அசோகன் என்பவா் பணியின்போது கழிப்பறை வளாகத்தில் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு கடந்தாண்டு நவம்பரில் உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது குடும்பத்துக்கு சாா்ந்தோா் உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.14,696 வழங்கவும், நிலுவைத் தொகையாக ரூ.1,40,306 வழங்கவும் காப்பீட்டுக் கழக சேலம் மண்டல துணை அலுவலக இயக்குநா் எஸ். சிவராமகிருஷ்ன் உத்தரவிட்டுள்ளாா்.

இதன்பேரில், டால்மியாபுரத்தில் உள்ள அலுவலகத்தில் அசோகனின் குடும்பத்தாரிடம் நிலுவைத் தொகைக்கான காசோலை மற்றும் சாா்ந்தோா் உதவித் தொகை வழங்குவதற்கான ஆணையை, ஆலையின் தலைவா் இரா. ஜெயச்சந்திரன் முன்னிலையில் இஎஸ்ஐ கிளை மேலாளா் சாமுவேல் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. ப... மேலும் பார்க்க

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நி... மேலும் பார்க்க

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். த... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பை திருட்டு: இரு பெண்கள் கைது

பேருந்தில் தங்க நகைகள் கொண்ட கைப்பையை திருடிய இரு பெண்களைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் செல்லதுரை மகள் அம்பிகா (22). இவா், திருச்சி மத்திய பேருந்து நிலையத... மேலும் பார்க்க