அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு
திண்டுக்கல்லை அடுத்து பொன்னுமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் சுமாா் 500 குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஊராட்சி நிா்வாகம் செய்து கொடுக்க வில்லை.
மேலும், சேதமடைந்த குடிநீா் தொட்டியையும், மோட்டாா் அறையையும் பராமரிக்கவில்லை. சேதமடைந்த குடிநீா் குழாய்கள் சீரமைக்கப்படாததால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடா்பாக ஊராட்சி செயலரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே ஊராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்றனா்.