செய்திகள் :

"அடுத்த போட்டியில் ஆடுவேனா என்று எனக்கே தெரியாது" - இங்கிலாந்தைச் சுருட்டிய இந்திய பவுலர் ஓபன் டாக்!

post image

இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தால் முதல் இரண்டு நாள்களில் 10 விக்கெட் இழப்புக்கு 587 ரன்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் முடிவில் 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

இதில், ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

ஆகாஷ் தீப்
ஆகாஷ் தீப்

பின்னர், நேற்று (ஜூலை 4) மூன்றாம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து அதிர்ச்சி கொடுத்தார் சிராஜ்.

84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணி ஃபாலோ ஆனை தவிர்க்க யாராவது சரிவிலிருந்து மீட்பர்களா என்று இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், ஹாரி ப்ரூக்கும், ஜேமி ஸ்மித்த்தும் இணைந்து 300+ பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலர்களை நோகடித்தனர்.

இதனால், ஃபாலோ ஆனை இங்கிலாந்து எளிதாகக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில் ஹாரி ப்ரூக்கை 158 ரன்களில் கிளீன் போல்டாக்கி ஆட்டத்தை மீண்டும் இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார் ஆகாஷ் தீப்.

இங்கிலாந்திடம் மீதமிருந்த 4 விக்கெட்டுகளும் அடுத்த 20 ரன்களில் காலி. இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேமி ஸ்மித் மட்டும் 184 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

இந்திய அணியில், சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஆகாஷ் தீப்
ஆகாஷ் தீப்

இந்த நிலையில், முக்கியமான நேரத்தில் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் கைக்குள் கொண்டுவந்த ஆகாஷ் தீப், "இந்த டெஸ்டில் இன்னும் இரண்டு நாள்கள் இருக்கிறது.

இந்தப் போட்டி எங்களின் வெற்றிக்கு மிக முக்கியமானது. அதனால், மூன்றாவது போட்டியைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை.

எனவே, இந்த இரண்டு நாள்களில் என்ன ஆற்றலை வெளிப்படுத்துவேன் என்று நான் நம்புகிறேன்.

ஆகாஷ் தீப்
ஆகாஷ் தீப்

அடுத்த போட்டியில் நான் விளையாடுவேனா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை அணிதான் முடிவெடுக்கும்.

போட்டிக்கு முந்தைய நாள்தான் அது எங்களுக்குத் தெரியும்." என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப், இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிபட்ட முருகன் கோயில்!

திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் போகர் நகரில் உலகப் புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் அமைந்துள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மற்றும் TNPL திண்டுக்கல்... மேலும் பார்க்க

Shubman Gill: "வரலாற்றில் எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை" - இரட்டை சதமும், கில் சாதனைகளும்!

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கெதிராக (ஜுலை 2) இரண்டாவது டெஸ்டில் களமிறங்கியது.முதல் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்தது போலவே, இந்த டெஸ்டிலும் பவுலிங்கை தேர்வு செய்தார்... மேலும் பார்க்க

"அந்த வீரர் இரட்டை சதமடித்தபோதே என் கரியர் முடிந்துவிட்டது" - மனம் திறக்கும் ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின், சேவாக் ஓப்பனர்களுக்குப் பிறகு உருவான மிகச்சிறப்பான ஓப்பனர்கள் ரோஹித், தவான்.2013 சாம்பியன்ஸ் டிராபியில் கவனம் ஈர்த்த இந்த ஓப்பனிங் ஜோடி சுமார் ஏழெட்டு வருடம் இந்த... மேலும் பார்க்க

ENGvsIND: 'பும்ரா எங்க? சாய் சுதர்சன் எங்க?' - அணித்தேர்வை வெளுத்து வாங்கிய ரவி சாஸ்திரி

'பிளேயிங் லெவன் மாற்றஙகள்!'இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் இந்திய அணி நிறைய மாற்றங்கள... மேலும் பார்க்க

`அசத்திய பவுலர்கள்' சேப்பாக் சூப்பர் கில்லீஸை சுருட்டிய இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி

திண்டுக்கல் நத்தத்தில் டிஎன்பிஎல் குவாலிபையர் -1 ஆட்டம் நேற்று நடைபெற்றது. அட்டவணையில் முதல் இரண்டு இடத்தில் இருந்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. டாஸ்... மேலும் பார்க்க

``முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்'' - ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம... மேலும் பார்க்க