செய்திகள் :

அடுத்த 2.5 ஆண்டுகளில் வேலை பறிபோகும் அபாயம்! ஏஐ ஆக்கிரமிப்பால் ஊழியர்கள் கவலை!

post image

செய்யறிவு தாக்கத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு வேலைகள் பாதிக்கப்படும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் செய்யறிவின் (செயற்கை நுண்ணறிவு) தாக்கம் குறித்து பிளைண்ட் குரூப்ஸ் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 74 சதவிகிதத்தினர், அடுத்த மூன்றாண்டுகளில் செய்யறிவால் தங்களின் வேலை பாதிக்கப்படும் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மீதமுள்ள 26 சதவிகிதத்தினர், செய்யறிவு எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும், தங்களின் வேலை பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

பொதுவாக, பணியிடங்களில் செய்யறிவின் தாக்கம் அடுத்த 2.8 ஆண்டுகளில் ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், செய்யறிவின் தாக்கம் 2.3 ஆண்டுகளிலேயே தெரிந்து விடும் என்று 16 ஆண்டுகால பணி அனுபவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, செய்யறிவின் தாக்கம் 3 ஆண்டுகளில் தெரியும் என்று புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்கள் (Freshers) கருத்து தெரிவிக்கின்றனர்.

இவர்களில் 43 சதவிகிதத்தினர், செய்யறிவால் தங்கள் அன்றாடப் பணிகள் குறைக்கப்பட்டிருப்பதாக அல்லது நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தங்கள் பணியிடங்களில் செய்யறிவு குறித்த தீவிரமான பேச்சுக்கள் அல்லது கவலைகள் இருப்பதாக 23 சதவிகிதத்தினர் கூறுகின்றனர்.

ஆனால், செய்யறிவு குறித்த எந்த மாற்றமும் தங்கள் பணியிடங்களில் காணவில்லை என்று 30 சதவிகிதத்தினர் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

வங்கதேசம்: பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இரு மதத்தினரிடையே மோதல்!

வங்கதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால், இரு மதத்தினரிடையே மோதல் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தில் ராமச்சந்திரபூர் பச்கிட்டா கிராமத்தில், ஜூன் 26 ஆம் தேதியில் 21 வயது (இந்து) பெண்ண... மேலும் பார்க்க

அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகனும் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்று ஆங்கில செய்தி ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.அமெரிக்காவில் அதிபர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. மேலும... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவு: விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது -அமெரிக்க உச்சநீதிமன்றம்

பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் மாற்றம் செய்து அந்நாட்டு அதிபா் டிரம்ப் கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவுக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என்று அந்நாட்டு ... மேலும் பார்க்க

உக்ரைன்: ட்ரோன் தாக்குதலில் தம்பதி உயிரிழப்பு

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியாநடத்திய ட்ரோன் தாக்குதலில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா்.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:ஒடேசா நகரில் ரஷியா ஏவ... மேலும் பார்க்க

காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பம... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!

காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) இரவு தொடங்கி சனிக்கிழமை(ஜூன் 28) வரையிலு... மேலும் பார்க்க