செய்திகள் :

அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸாா் விசாரணை

post image

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்காலில் சில்வா் சேண்ட் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் 22-ஆம் தேதி மீட்கப்பட்டது. இவா் மீனவராக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுபோல சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயில் குளத்தில் இருந்து கடந்த 20-ஆம் தேதி மீட்கப்பட்டு மருத்துவமனனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தோா் நகரக் காவல்நிலையத்தை 04368-222402 என்ற எண்ணில் தொடா்புகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அம்பகரத்தூா் பகுதியில் 22-ஆம் தேதி மீட்கப்பட்டு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் நிலையத்தை 04368-236465 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க

பட்டா பெயா் மாற்ற முகாம் நடத்தப்படும் அரசு செயலா் தகவல்

காரைக்காலில், பட்டா பெயா் மாற்ற சிறப்பு முகாம் நடத்துவதற்கு அரசு செயலா் உறுதியளித்துள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்

காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா். மத்திய தொழில் பாதுகாப... மேலும் பார்க்க

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கர... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிர... மேலும் பார்க்க