செய்திகள் :

``அண்ணாமலைக்கு எங்களின் பலம் நன்றாகத் தெரியும்'' - சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார்

post image
மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர், ஒடிசா முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர், ஒடிசா முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை சென்னை வந்த கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில உரிமைகளைக் காக்க நாங்கள் ஒருங்கிணைந்துள்ளோம். பொருளாதாரம், கல்வி என அனைத்திலும் தென்னிந்திய மாநிலங்கள் முன்னேறிய முற்போக்கான மாநிலங்களாகத் திகழ்கிறது.

தொகுதி மறுவரையறையில் எம்.பிக்களின் சீட்டுகளைக் குறைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இது எங்களின் பிரச்னையில்லை, எங்கள் மக்களின் பிரச்னை, நம் நாட்டின் பிரச்னை. மாநில உரிமைக்காக ஒன்று சேர்ந்து போராட தயாராக இருக்கிறோம்" என்றார்.

கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி

'தமிழ்நாடு 'பா.ஜ.க' இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்துப் போராடிக் கொண்டிருக்கிறது' என்ற கேள்விக்குப் பதிலளித்திருக்கும் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார், "பா.ஜ.க வின் கருப்புக் கொடிகளை நான் வரவேற்கிறேன். இந்த ஆபிஸர் (அண்ணாமலை) எங்கள் மாநிலத்தில் பணியாற்றியவர். அவருக்கு நாங்கள் யார், எங்களின் பலம் என்னவென்று நன்றாகத் தெரியும். அவர் அவரது வேலையைப் பார்க்கட்டும் விடுங்கள்" என்று பதிலளித்திருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Kerala: ``நாட்டுக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர்..'' - SFI பேனரால் ஆவேசமான கேரள கவர்னர்

கேரள மாநிலத்தில் இப்போதைய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், ஆளும் சி.பி.எம் அரசும் இணக்கமாக உள்ளது. கடந்த வாரத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, கேரள கவர்னர் மற்றும் முதல... மேலும் பார்க்க

2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடிகள்; பறிபோன ரூ.4,245 கோடி! - RBI நடவடிக்கை என்ன?

2024-25 நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், 2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ரூ.4,245 கோடி பறிபோய் உள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில், 2.8 மில்லியன் வழக்குகளில் ரூ. 4,40... மேலும் பார்க்க

``உங்களுக்கு ஏளனமாக உள்ளதா?'' - நிதிப் பகிர்வு குறித்து நிர்மலா பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

'கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும், கோவையும் தான் அதிக வரி கொடுக்கின்றது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னை... மேலும் பார்க்க

``சென்னையும், கோவையும் `இப்படி' கேட்டால் என்ன செய்வது?'' - நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?

சென்னையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படும் வரிகள் குறித்து பேசினார். அதில்,"தமிழ்நாட்டில்,... மேலும் பார்க்க

``அந்த அறையில் பணம் வைத்ததே இல்லை!'' - தன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து நீதிபதி பதில்

கடந்த வாரம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவர் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. இதனால், தீயணைப்பு துறையின் உதவியை நாடியுள்ளது அவரது குடும்பம். தீயணைப்பு முட... மேலும் பார்க்க

Fair Delimitation: ``தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்தி... மேலும் பார்க்க