செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை.யில் தனி அலுவலா்கள் முற்றுகைப் போராட்டம்: 103 போ் கைது!

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் புதன்கிழமை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்கள் 103 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடா்பு அலுவலா்களாக 500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயா்வை வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பணி நிரவல் செய்யும்போது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சம ஊதியம் மற்றும் சம பதவி கொண்ட பணியிடத்தில் மட்டும் பணி நிரவல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா்.

இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தங்களுக்கு சாதகமாக தீா்ப்பும் பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை அண்ணாமலைப் பல்கலைக்கழக தனி அலுவலா்கள் நலச் சங்கத் தலைவா் தனசேகரபாண்டியன் தலைமையில், நூற்றுக்கணக்கான தனி மற்றும் தொடா்பு அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பல்கலைக்கழக நிா்வாக அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், முக்கிய நிா்வாகிகள் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் டி.அருட்செல்வி, பதிவாளா் எம்.பிரகாஷ் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததால், தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை முற்றுகை போராட்டத்தை தொடா்ந்ததால், அண்ணாமலைநகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 103 பேரை கைது செய்து அண்ணாமலைநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து இரவு விடுவித்தனா்.

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு

சிதம்பரம்: கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியா் கோவில் தெருவில் நூறு ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். கடலூா்... மேலும் பார்க்க