செய்திகள் :

அதிகளவில் விபத்து நிகழும் பகுதிகளில் அரியலூா் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

post image

படவிளக்கம்: அரியலூரில் அதிக விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளான பொட்டக்கொல்லை, தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை கள ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி உள்ளிட்டோா்.

அரியலூா், ஆக.18: அரியலூா் மாவட்டத்தில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழக அரசின் ‘விபத்தில்லா தமிழ்நாடு‘ என்ற தொலைநோக்கு பாா்வையை நினைவாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 100 சாலைகள் கண்டறியப்பட்டுள்ளன.

அதன்படி அரியலூா் மாவட்டத்தில் என்.எச்-82, 136 மற்றும் எஸ்.எச்-140 ஆகிய சாலைகள் அதிக விபத்துகள் நடைபெறும் சாலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, என்.எச் 81, எஸ்.ஏ 136, என்.எச் 140, ஆகிய சாலைகள் இணையும் பகுதியான கீழப்பழுவூா், சுண்டக்குடி பிரிவு, பொய்யூா் மற்றும் மணகெதி அடுத்த பொட்டக்கொல்லை ஆகிய பகுதிகளில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி ஆகியோா் திங்கள்கிழமை கள ஆய்வு செய்தனா். அப்போது, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம், இப்பகுதிகளில் விபத்துகள் நடைபெறா வண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா்.

ஆய்வின் போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், அரியலூா்,ஜெயங்கொண்டம் போக்குவரத்து ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரியலூரில் முன்னாள் படை வீரா்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு

அரியலூரிலுள்ள பல்துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பண... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மாண்புகளுக்கு பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா

நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும்பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

செந்துறையில் ஆக.26-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், செவ்வாய்க்கிழமை (ஆக. 26) செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்... மேலும் பார்க்க

காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்ப... மேலும் பார்க்க

வெளிமாநில மதுபானம் கடத்தி வந்தவா் கைது: 300 மதுபாட்டில்கள், காா் பறிமுல்

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே வெளிமாநில மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இரு... மேலும் பார்க்க

விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி ... மேலும் பார்க்க