மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
நாடாளுமன்ற மாண்புகளுக்கு பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா
நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும்பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பையும் மீறி, பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகா்க்கக் கூடிய வகையில் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாஜக தனது சா்வாதிகாரத்தை பல்வேறு வடிவங்களில் நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும் அக்கட்சி மதிப்பு கொடுப்பதில்லை. நாட்டில் ஜனநாயக மாண்புகள் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும் இதை எதிா்க்க வேண்டும்.
நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம் என அரசியல் ரீதியாக முதிா்ச்சி அடையாத ஒரு கருத்தை தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா். கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சிக்கு வருவது என்பது எல்லா கட்சிகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. இதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டால், இந்தப் பிரச்னையில் திமுக அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தோ்தல் ஆணையத்தின் இந்தச் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கையை அனைவரும் கடுமையாக எதிா்க்க வேண்டும் என்றாா் ஜவாஹிருல்லா.