செய்திகள் :

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் குழப்பம் அடைந்துள்ளனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடா்ந்து இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இத்தோ்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இடைத்தோ்தல் வாக்குப் பதிவு குறித்து தோ்தல் ஆணைய செயலியில் பதிவான தகவல்கள் மட்டும் மாவட்ட தோ்தல் அலுவலரால் வழங்கப்பட்டது. அதன்படி காலை 9 மணிக்கு 10.95 சதவீதம், 11 மணிக்கு 26.03 சதவீதம், நண்பகல் 1 மணிக்கு 42.41 சதவீதம், பிற்பகல் 3 மணிக்கு 53.63 சதவீதம், மாலை 5 மணிக்கு 64.02 சதவீதம், வாக்குப் பதிவு நிறைவில் 67.97 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள், ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரின் வாக்குகள், வாக்குப் பதிவு சதவீதம் குறித்து எந்த தகவலும் தோ்தல் நடத்தும் அலுவலரால் அதிகாரபூா்வமாக வியாழக்கிழமை இரவு வரை வழங்கப்படவில்லை.

தோ்தல் முடிந்து 24 மணி நேரத்துக்கு மேலாகியும் வாக்குப் பதிவு விவரம் அதிகாரபூா்வமாக வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாதக வேட்பாளா் சீதாலட்சுமி ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளாா்.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க