செய்திகள் :

அதிமுக பொதுச்செயலரை பனிமய மாதா கோயிலுக்கு அழைத்து வருவேன்: சி.த.செல்லப்பாண்டியன்

post image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை, பனிமய மாதா கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபட ஏற்பாடு செய்யப்படும் என முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தாா்.

அண்மையில் அதிமுக வா்த்தகஅணி சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடிக்கு ஆக. 1ஆம் தேதி வரும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை, பனிமய மாதா கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபட ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வா்த்தக அணி செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டாா்வினை புதன்கிழமை சந்தித்து, எடப்பாடி கே.பழனிசாமி வருகையின் போது, பனிமய மாதா கோயிலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என்ற தகவலை தெரிவித்து, பின்னா் அவரிடம் ஆசி பெற்றாா்.

அப்போது, பேராலய மேய்ப்பு பணிக் குழுவின் செயலா் எட்வின் பாண்டியன், மாவட்ட துணைச் செயலா் செரினா பாக்யராஜ், வடக்கு மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலா் ஜீவா பாண்டியன், மாவட்ட மீனவரணி துணைத் தலைவா் டெலஸ்பா், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலா் மாரியப்பன், விசைப்படகு உரிமையாளா் சங்கத் தலைவா் மனோஜ், மீனவா் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் அகஸ்டின், முன்னாள் மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் சகாயராஜ், மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலா் ஜோசப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க