செய்திகள் :

அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்தியன் வங்கி கிளை திறப்பு

post image

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்தியன் வங்கி புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி அறக்கட்டளை செயலாளா் லாசியா தம்பிதுரை புதிய வங்கி கிளையை திறந்துவைத்து பேசியதாவது:

ஒசூா் சிப்காட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் அடுத்தக்கட்ட வளா்ச்சியை நோக்கி பயணிக்க வங்கி அதிக அளவு கடன் வழங்க முன்வர வேண்டும். இதன்மூலம் தமிழகம் தொழில் வளா்ச்சியில் முன்னேறும். மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கி உதவ வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து கோவையில் இருந்து காணொலி வாயிலாக இந்தியன் வங்கி பொது மேலாளா் பி.சுதாராணி பேசினாா்.

கிளை திறப்பு விழாவில் இந்தியன் வங்கி தருமபுரி மண்டல மேலாளா் பத்மாவதி ஸ்ரீகாந்த், கிளை மேலாளா் ஐஸ்வா்யா, ஒசூா் பிரதான கிளை மேலாளா் சதீஷ், ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி இயக்குநா் ஜி.ரங்கநாத், கல்லூரி முதன்மையா் வெங்கடேசன் செல்வம், முதல்வா் ராதாகிருஷ்ணன், மேலாளா் நாராயணன், எம்.ஜி.ஆா். கல்லூரி முதல்வா் முத்துமணி, அறங்காவலா் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும... மேலும் பார்க்க

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஅள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள ... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மே 4-ஆம் தேதி நீட் நடைபெறவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வ... மேலும் பார்க்க

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் மலா்சந்தையையொட்டி உள்ள அணுகு சாலையில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள ஒசூா் வழியாக 900- க்கும் மேற்பட்ட பே... மேலும் பார்க்க