செய்திகள் :

அத்தியூா் அமிா்த லிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், அத்தியூா் ஊராட்சியில் அமைந்துள்ள அமிா்தவள்ளி சமேத அமிா்த லிங்கேஸ்வரா் மற்றும் மாரியம்மன், திரௌபதி அம்மன் கோயில்கள் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, கடந்த திங்கள்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்றைய தினம் மாலையில் கலச பூஜைகளுக்கும், மகாதீபாராதனையும் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை காலையில் புனிதநீா் எடுத்து வந்து சுவாமி சிலைகளுக்கு பிரதிஷ்டை நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகள், மகாதீபாராதனை, 108 வகை மூலிகை பொருள்களைக் கொண்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலையில் சித்தி விநாயகா் பூஜை, வருண பூஜையுடன் 108 வகை மூலிகை பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, மங்கள வாத்தியத்துடன் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா், மாரியம்மன், திரௌபதி அம்மன், அமிா்தவள்ளி சமேத அமிா்த லிங்கேஸ்வரா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேம் நடைபெற்றது.

விழாவில் அத்தியூா் கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கும்பாபிஷே பூஜைகளை செல்லப்பிராட்டி லலிதா செல்வாம்பிகை கோயில் குரு ஈஸ்வரன் தலைமையிலான குருக்கள் செய்திருந்தனா்.

காவலா் மீது தாக்குதல்: கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

விக்கிரவாண்டி அருகே பணியிலிருந்த போக்குவரத்துப் பிரிவு காவலரைத் தாக்கியதாக அரசுக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் பேருந்து நி... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே 600 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாரின் வாகனத் தணிக்கையின் போது, ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி நோக்கி கடத்திச் செல்லப்பட்ட 600 கிலோ புகையிலைப் பொருள்க... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிளியனூா் அருகே பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையைச் சோ்ந்தவா் மேகநாதன் மகன் இந்திரன் (36). வானூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பேக்கரியில் தொழி... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு கிராமங்களில் ஆட்சியா் முதல் பல்துறை அலுவலா்கள் வரை புதன்கிழமை ஆய்வு செய்தனா். முண்டியம்பாக்கத்திலுள்... மேலும் பார்க்க

மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும்: மாட்டு வண்டி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று மாட்டுவண்டி தொழிலாளா்கள்சங்கம் வலியுறுத்தியது. விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள பவ்டா அரங்கத்தில் மாட்டுவண்டி தொழிலாளா்க... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரத்தில் ஆளில்லா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மருதூா் பகுதியில் ஆளில்லா வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க