செய்திகள் :

அனிமல் பட வில்லனுக்கு கௌரவம்..! டொரண்டோ திரைப்பட விழாவுக்குத் தேர்வு!

post image

இயக்குநர் அனுராக் காய்ஷப் இயக்கியுள்ள பான்டர் என்ற படம் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காய்ஷப் பாபி தியோலை வைத்து பான்டர் (மங்கி இன் எ கேஜ்) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் பாபி தியோல் உடன் நடிகை சான்யா மல்ஹோத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது, இந்தப் படம் மிகவும் புகழ்பெற்ற டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

இந்தத் திரைப்பட விழா வரும் செப். 4 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

டொரண்டோ திரைப்பட விழாவின் 50ஆவது எடிஷனில் தேர்வாகியுள்ள இந்தியப் படத்துக்கு பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பாபி தியோல், “சொல்லப்படாத கதைகள்... 50-ஆவது டொரண்டோ திரைப்பட விழாவில் அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

உண்மைக் கதையை திரைப்படமாக எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அனிமல் படத்தில் கவனம் ஈர்த்த பாபி தியோல் தமிழில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். ஜன நாயகன், ஆல்பா, ஹரி ஹர வீர மல்லு போன்ற படங்களும் திரைக்கு வரவிருக்கிறது.

சான்யா மல்ஹோத்ரா தக் லைஃப் படத்தில் பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

Anurag Kashyap's "Bandar" (Monkey In a Cage), starring Bobby Deol in the lead role, will premiere at the Toronto International Film Festival in the special presentations category.

மான்செஸ்டா் டெஸ்ட் இன்று தொடக்கம்- இங்கிலாந்தை வீழ்த்தும் கட்டாயத்தில் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்குகிறது.மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருப்பதால், தொடரைத... மேலும் பார்க்க

மத்திய அரசின் வரம்புக்குள்ளாக வருகிறது பிசிசிஐ?

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள ‘தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா’-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளாக கொண்டுவ... மேலும் பார்க்க

பிரணாய் அசத்தல் வெற்றி

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய், அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 35-ஆம் நிலை வீரரா... மேலும் பார்க்க

முதல் கேமை ‘டிரா’ செய்த கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக்

ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோா் தங்களது முதல் கேமை டிரா செய்து உறுதியான நிலையில் இருக்கின்றனா்.இதில் கோனெரு ... மேலும் பார்க்க

ஆக. 1-இல் சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி தொடக்கம்: அா்ஜுன் எரிகைசி, அனிஷ் கிரி, விதித் குஜராத்தி பங்கேற்பு

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டி 3-ாவது சீசன் வரும் ஆக. 6 முதல் 15 வரை சென்னை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறுகிறது. பரிசுத் த... மேலும் பார்க்க

சக்காரி முன்னேற்றம்; காலின்ஸ் வெளியேற்றம்

முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கிரீஸின் மரியா சக்காரி வெற்றி பெற, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் தோல்வியுற்றாா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை, சக்காரி 6-... மேலும் பார்க்க