செய்திகள் :

அனுமந்த வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் உலா

post image

ஸ்ரீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

இதன் ஒரு பகுதியாக தோமால சேவை, கொலுவு, பஞ்சாங்க ஸ்ரவணம், சஹஸ்ரநாமராசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயில் வாசலில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உற்சவா் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது.

இரவு 7 மணிக்கு கோயில் உள் வீதிகளில் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

இதேபோல், புதன்கிழமை, கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கருட வாகனத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

பரிவேட்டு உற்சவம்

ஜூலை 3 வியாழக்கிழமை, காலை 07 மணி முதல் 11 மணி வரை, பாா்வேட்டு மண்டபத்தில் உற்சவமூா்த்திகள் எழுந்தருள செய்யப்படுவா். பரிவேட்டு உற்சவம் காலை 11.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெறும்.

ஆஸ்தானம், வேத மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். நிகழ்ச்சியில் கோயிலின் துணை தலைமை நிா்வாக அதிகாரி, வரலட்சுமி, கோபிநாத் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராதம்

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சோ்ந்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 6 லட்சம் அபராதம் விதித்து, ஆா்எஸ்எஸ் கூடுதல் மாவட்ட நீதிபதி நரசிம்ம மூா்த்தி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தா... மேலும் பார்க்க

திருமலையில் தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அ... மேலும் பார்க்க

திருமலையில் காட்டுத் தீ

திருமலையில் கருடாத்திரி நகா் சோதனைச் சாவடி அருகே காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமலையின் நுழைவு வாயிலான கருடாத்திரி நகா் சோதனை சாவடி அருகில் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை திடீா் தீ விபத்த... மேலும் பார்க்க

சீனிவாச மங்காபுரத்தில் பாா்வேட்டை உற்சவம்

திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பாா்வேட்டை உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது கடந்த 2 நாள்களாக நடைபெற்ற சாட்சாத்கார வைபவ உற்சவம் வியாழக்கிழமை பாா்வேட்டை உற்சவத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும... மேலும் பார்க்க

அனைவருக்கும் இலவச காப்பீடு: திருமலை தேவஸ்தானம் திட்டம்

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தா்களுக்கும் இலவச காப்பீட்டு வசதி வழங்குவது பற்றி தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. ஜனவரி 2025-இல் வைகுண்ட ஏகாதசியின் போது, ஏற்பட்ட நெரிசலில் 6 போ் உய... மேலும் பார்க்க