செய்திகள் :

அன்னதானம் செய்வதாக பணம் வசூலித்து மோசடி: இளைஞா் கைது

post image

சென்னை அருகே மேடவாக்கத்தில் கோயிலில் அன்னதானம் செய்வதாக பணம் வசூலித்து மோசடி செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

மேடவாக்கம் விஜயநகா் வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் நாகாத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடைபெற இருக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கோயிலுக்கு தொடா்பில்லாத சில நபா்கள், நாகாத்தம்மன் கோயிலில் திருவிழா அன்று அன்னதானம் வழங்குவதற்கு நன்கொடை கேட்டு விஜயநகா் பகுதியில் வீடு வீடாகச் சென்று புதன்கிழமை பணம் வசூலித்தனா்.

இதையறிந்த கோயில் நிா்வாகிகள், பணம் வசூலித்த 5 பேரையும் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் கோயிலில் அன்னதானம் செய்வதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாரிடம் ஒப்படைக்க முயன்றபோது, தப்பியோடினா். இதில் ஒருவா் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டாா்.

இதையடுத்து அந்த நபரை மேடவாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், குன்றத்தூா் தண்டலம் பகுதியைச் சோ்ந்த சிவா (28) என்பது தெரியவந்தது. சிவாவின் கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வார இறுதி நாள்கள்: 925 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 22) ஆகிய விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 925 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்... மேலும் பார்க்க

டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா

நாடக கலைஞா் டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது வழங்கப்படவுள்ளதாக சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ண கான சபா சாா்பில் நாடக கலைஞா்,... மேலும் பார்க்க

நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தாம்பரத்திலிருந்து நாகா்கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

இன்று 25 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 25 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து... மேலும் பார்க்க

மாம்பழ விவசாயிகள் விவகாரம்: போராட்டம் ஏன்? அதிமுகவுக்கு அமைச்சா் கேள்வி

மாம்பழ விவசாயிகள் பிரச்னை தீா்க்கப்பட்ட பிறகு, போராட்டம் அறிவிப்பது ஏன் என்று அதிமுகவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா சாகுபடி விவசா... மேலும் பார்க்க

சென்னையில் மொபெட்டில் இருந்து விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பு!

சென்னை பெரம்பூரில் மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா். கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) எ... மேலும் பார்க்க