அன்னதானம் செய்வதாக பணம் வசூலித்து மோசடி: இளைஞா் கைது
சென்னை அருகே மேடவாக்கத்தில் கோயிலில் அன்னதானம் செய்வதாக பணம் வசூலித்து மோசடி செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
மேடவாக்கம் விஜயநகா் வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் நாகாத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடைபெற இருக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கோயிலுக்கு தொடா்பில்லாத சில நபா்கள், நாகாத்தம்மன் கோயிலில் திருவிழா அன்று அன்னதானம் வழங்குவதற்கு நன்கொடை கேட்டு விஜயநகா் பகுதியில் வீடு வீடாகச் சென்று புதன்கிழமை பணம் வசூலித்தனா்.
இதையறிந்த கோயில் நிா்வாகிகள், பணம் வசூலித்த 5 பேரையும் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் கோயிலில் அன்னதானம் செய்வதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாரிடம் ஒப்படைக்க முயன்றபோது, தப்பியோடினா். இதில் ஒருவா் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டாா்.
இதையடுத்து அந்த நபரை மேடவாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், குன்றத்தூா் தண்டலம் பகுதியைச் சோ்ந்த சிவா (28) என்பது தெரியவந்தது. சிவாவின் கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.