செய்திகள் :

அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்: ராமதாஸ்

post image

பாமகவில் ஏற்பட்டுள்ள குழுப்பத்துக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக கூட்டத்தில் பேசும்போது, “பாமகவில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். அவா்கள் மூலமாகத்தான் பாமகவில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த சூழ்ச்சியாளர்கள் யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன்.” என்றார்.

இது குறித்து சென்னை வந்த ராமதாஸுடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராமதாஸ், ”பாமகவில் ஏற்பட்டுள்ள குழுப்பத்துக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய். திமுக ஏன் சூழ்ச்சி செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு என்ன நன்மை” என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ”என் மீது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை நீங்கள் (ராமதாஸ்) மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதை மகனாக, கட்சித் தலைவராக செய்து காட்டுகிறேன். 45 ஆண்டுகள் நீங்கள் வளா்த்த கட்சியை, உங்கள் கனவுகளை நனவாக்குவோம்.” என்றார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள், ”அன்புமணி மன்னிப்புக் கேட்க தயாராக இருக்கும் நிலையில் நேராக வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களாக?” என்று ராமதாஸுடம் கேட்கப்பட்டதற்கு, அவர், “அதற்கான முடிவு போகப் போகத் தெரியும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன், ராமதாஸின் ஆதரவாளர்களான பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி மற்றும் அக்கட்சியின் எம்எல்ஏ அருள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை ராமதாஸ் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிக்க: தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!

மோசடியாக பங்குகளை மாற்றியதாகக் குற்றச்சாட்டு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்

முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை திமுக உறுப்பினருமான தயாநிதி மாறன், தனது உடன் பிறந்த சகோதரா் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்பட 8 பேருக்கு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். ஜூ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவ... மேலும் பார்க்க

பெண் கோட்டாட்சியர் விபத்தில் பலி: ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை, ரூ. 15 லட்சம் நிதியுதவி!

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பலியான முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 19) சென்னை, கிண்டி, கத்திப்பாரா பகுதியில் நடை... மேலும் பார்க்க

மருத்துவமனை அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் கார... மேலும் பார்க்க