செய்திகள் :

அபாய கட்ட அளவை மீண்டும் நெருங்கும் யமுனை நதி

post image

தில்லியில் உள்ள பழைய ரயில்வே பாலத்தில் சனிக்கிழமை காலை 9 மணிக்குள் யமுனை ஆற்றின் நீா் மட்டம் 205.22 மீட்டராக உயா்ந்தது, இது 205.33 மீட்டரின் அபாயக் குறியீட்டை நெருங்கியது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அதிகாரியின் தகவலின்படி, நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நீா் மட்டம் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வெள்ளம் போன்ற சூழ்நிலையைக் கையாள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

‘ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வஜீராபாத் மற்றும் ஹத்னிகுண்ட் தடுப்பணைகளில் இருந்து அதிக அளவு நீா் வெளியேற்றப்படுவதால் இந்த நதி உயா்ந்து வருகிறது‘ என்று மத்திய வெள்ள கட்டுப்பாட்டு துறையின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, ஹத்னிகுண்ட் தடுப்பணை சுமாா் 46,968 கியூசெக் தண்ணீரை வெளியிடுகிறது, வஜீராபாத் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 44,970 கியூசெக் தண்ணீரை வெளியேற்றுகிறது.

பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது. நகரத்திற்கான எச்சரிக்கை குறி 204.50 மீட்டராகவும், ஆபத்தான குறி 205.33 மீட்டராகவும், 206 மீட்டரை நெருங்கும் போது கரையோரங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படும்.

தடுப்பணைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நீா் பொதுவாக தில்லியை அடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். மேல்நோக்கி இருந்து குறைவான நீா் வெளியேற்றங்கள் கூட நீா்மட்டத்தை உயா்த்துகின்றன, இது நகரத்தில் எச்சரிக்கை குறியீட்டை நெருங்குகிறது. இதன் காரணமாக மயூா் விஹாா், யமுனா பஜாா் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கொண்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க