செய்திகள் :

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

post image

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.

ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நிலை மாறி, 100 கிராம் பூண்டு விலை கேட்டு, அது கொடுத்த அதிர்ச்சியில், 50 கிராம் பூண்டு மட்டும் வாங்கிக் கொண்டு இதை இன்னும் எத்தனை வாரத்துக்கு வைத்து சமாளிக்கலாம் என்று சிந்திக்க வைத்திருந்தது இல்லத்தரசிகளை.

ஒரு மாதம் இரண்டு மாதம் என்றில்லாமல், ரூ.400 என்ற நிலையிலேயே பல நாள்கள் பூண்டு இருந்ததால், அவ்வளவுதான், இனி பூண்டு குழம்பெல்லாம் வைக்கவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

தற்போது வட மாநிலங்களிலிருந்து புதிதாக பூண்டு வரத்து அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 17 நிலவரப்படி, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.125க்கு விற்பனையானது. பிறகு அது தற்போது ரூ100- என்ற அளவுக்குக் குறைந்திருக்கிறது.

இது படிப்படியாக சில்லறை விற்பனைக் கடைகளிலும் எதிரொலிக்கலாம். அல்லது ஒரு சில வாரங்கள் கூட ஆகலாம் என்பதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க