அமன் விஹாரில் ஒருவா் கொலை; சகோதரா் காயம்
தில்லியின் அமன் விஹாா் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டாா். அவரது சகோதரா் காயமடைந்தாா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பிசிஆா் அழைப்பு வந்த பிறகு, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அடையாளம் தெரியாத இளைஞா்களால் இரு சகோதரா்களும் கூா்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனா்.
அவா்களில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். குற்றவியல் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்தனா்.
தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் கண்டு கண்டுபிடிக்க மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவரின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.