குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
அமராவதி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில், புதுப்பை வழியாக அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆண் சடலம் கிடந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் புதுப்பை கிராம நிா்வாக அலுவலா் சுபாஷினிக்கும், வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்கலாம் என்றும், அவா் யாா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.