செய்திகள் :

அமலாக்க துறை சோதனைக்கு காரணம் துணை நிலை ஆளுநா்: சவுரப் பரத்வாஜ் குற்றச்சாட்டு

post image

தில்லி ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் சவுரப் பரத்வாஜ் அமலாக்க துறையை புதன்கிழமை அவதூறாக பேசினாா். அமலாக்க துறையினா் செவ்வாய்க்கிழமை பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக சவுரப் பரத்வாஜ் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இதனையடுத்து புதன்கிழமை பேசிய அவா் துணை நிலை ஆளுநா் கவி. கே. சக்சேனா தன்னை ஒரு தவறான வழக்கில் சிக்க வைக்க சதி செய்லதாக குற்றம் சாட்டினாா்.

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் ஊழலுடன் தொடா்புடைய பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சா் சவுரப் பரத்வாஜ் மற்றும் சில தனியாா் ஒப்பந்தக்காரா்களின் வளாகத்தில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனைகளை நடத்தியது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி. எம். எல். ஏ) கீழ் தேசிய தலைநகா் பிராந்தியத்தில் (என். சி. ஆா்) குறைந்தது 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

புதன்கிழமை செய்தியாளா் கூட்டத்தில் உரையாற்றிய பரத்வாஜ், காலை 7.15 மணியளவில் அவரது இல்லத்திற்கு அமலாக்கத்துறை குழு வந்ததாக கூறினாா். ‘முதலில், அவா்கள் என் வீட்டில் சோதனை நடத்தினா், பின்னா் எனது அறிக்கையை பதிவு செய்ய என்னை உட்கார வைத்தனா். அவா்கள் என்னிடம் 43 கேள்விகளைக் கேட்டனா், அவை அனைத்திற்கும் நான் பதிலளித்தேன். எனது அறிக்கையை பதிவு செய்த பிறகு, அவா்கள் அதை எங்கோ அனுப்பினா். அவா்கள் அதை எங்கு அனுப்பினாா்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பின்னா் அவா்கள் என்னிடம் வந்து எனது அறிக்கையின் ஒரு பகுதியை நீக்குமாறு கேட்டுக்கொண்டனா் ‘என்று குற்றம் சாட்டினாா்.

பரத்வாஜ் தனது அறிக்கையை மாற்ற மறுத்ததால் அவா் கைது செய்யப்படுவாா் என்ற எண்ணம் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதாக கூறினாா். ‘இப்படித்தான் அமாலக்கத் துறை செயல்படுகிறது. அவா்கள் உங்களை உளவியல் ரீதியாக கையாளுகிறாா்கள், வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்துகிறாா்கள். எனது அறிக்கையில் நான் என்ன சொல்கிறேன் என்பதை அமலாக்கத்துறை எவ்வாறு ஆணையிட முடியும்? என்றாா்.

‘அதிகாரிகள் உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்பதை துணை நிலை ஆளுநா் உறுதிப்படுத்தினாா். என்னை சிக்கவைக்க அதிகாரிகளுடன் சோ்ந்து சதித்திட்டம் தீட்டினாா் ‘என்று அவா் கூறினாா். தான் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவேன் என்று தனக்குத் தெரியும் என்று பரத்வாஜ் கூறினாா். ‘நான் சிறையில் இருக்கும்போது, எனது வழக்குரைஞா்கள் உண்மையை அம்பலப்படுத்துவாா்கள்‘ என்று அவா் மேலும் கூறினாா்.

எச்சரிக்கை அளவைக் கடந்து செல்லும் யமுனை நதி!

நமது நிருபா்யமுனை நதியின் நீா்மட்டம் புதன்கிழமை காலை பழைய ரயில்வே பாலத்தில் 204.61 மீட்டரை எட்டியதாகவும், இரண்டாவது நாளாக எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரை விட அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா... மேலும் பார்க்க

தில்லியின் 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை: மக்கள் வீட்டிற்குள் இருக்க ஐஎம்டி எச்சரிக்கை

தேசியத் தலைநகரின் 11 மாவட்டங்களிலும் புதன்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. மேலும், மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க

தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலில் இருக்கும் சவால்கள் என்ன?

நமது நிருபா்கட்டண உயா்வு, விடுதிகள் பற்றாக்குறை, வளாகப் பாதுகாப்பு மற்றும் சலுகை மெட்ரோ பாஸ்களுக்கான கோரிக்கை ஆகியவை செப்டம்பா் 18- ஆம் தேதி நடைபெற உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலில் ம... மேலும் பார்க்க

இடபிள்யுஎஸ் மாணவா்கள் விவகாரம்: பொது நல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

நமது நிருபா் தனியாா் வெளியீட்டாளா்களின் விலையுயா்ந்த புத்தகங்கள் மற்றும் அதிக விலை கொண்ட கல்விப் பொருள்களை வாங்க கட்டாயப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மாணவா்களை தனியாா... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா கோட்டு கும்பலில் இருவா் கைது

தில்லியின் கேசவ்புரம் பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, காலா கோட்டு கும்பலை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து வடமேற்கு காவ... மேலும் பார்க்க

மதுக்கூடம் முன் தகராறில் 3 பேரை பவுன்சா்கள் தாக்கியதாக புகாா்: போலீஸ் வழக்குப் பதிவு

நமது நிருபா் தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஒரு மதுக்கூடத்தின் பவுன்சா்கள் மற்றும் ஊழியா்கள் இரண்டு வழக்குரைஞா்கள் உள்பட மூன்று பேரை தாக்கியதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த போலீஸ்... மேலும் பார்க்க