செய்திகள் :

அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

post image

அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவதில்லை என்று கூறியதால்தான், இந்தியா போரைக் கைவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கவிருப்பதாக டிரம்ப் கூறியிருப்பது, மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்களும் வர்த்தகர்களும் கூறுகின்றனர்.

இதுகுறித்து, செய்தி நிறுவனத்திடம் டிரம்ப் தெரிவித்ததாவது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமெரிக்க பொருள்கள் மீதான வரியைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது. தடைகளை அகற்றும் நாடுகளில் இந்தியாதான் சிறந்த நாடு.

அமெரிக்காவுடன் வர்த்தகம் புரிய இந்தியா விரும்புகிறது. வர்த்தகத்தைப் பயன்படுத்தித்தான், அவர்களின் பகையைத் தீர்த்து வைத்தேன். அமெரிக்காவுடன் வர்த்தகம் புரிய அனைத்து நாடுகளும் விரும்புகின்றனர். ஆனால், அனைவருடனும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

சீனாவுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர்களும் இறக்குமதி வரியைக் குறைத்துள்ளனர். அவ்வாறு செய்யவில்லையெனில், சீனா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

இருப்பினும், அமெரிக்கா மீதான இந்தியாவின் வரிகுறைப்பு நடவடிக்கையாக டிரம்ப் கூறியது குறித்து, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

ம.பி.: இளைஞரைக் கொன்று உடலில் பாதியை தின்ற புலி

மத்தியப் பிரதேசத்தில் பீடி இலைகளை சேகரிக்க சென்ற இளைஞரை கொன்று உடலில் பாதியை தின்ற புலியால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்டாங்கி வனப்பகுதியில் பீடி இலைகளைச் சேக... மேலும் பார்க்க

பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’: அமித் ஷா

பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா். மேலும், ‘நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் துல்லி... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை விமான நிலையம் மற்றும் தாஜ் ஹோட்டலுக்கு மிரட்டல் விட... மேலும் பார்க்க

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!

தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின... மேலும் பார்க்க

கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் 'சஞ்சீவனி' எனும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளது.உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் அம்மாநிலத்திலுள்ள சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ்... மேலும் பார்க்க