செய்திகள் :

அமெரிக்க அதிபா் டிரம்ப் போா் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது எப்படி? அமைச்சா் பிரியாங்க் காா்கே கேள்வி

post image

போா் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டது எப்படி? என்று கா்நாடக மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் நிறுத்தம் ஏன், போா் நிறுத்த நிபந்தனைகள் என்ன, பிரதமா் மோடிக்கு பதிலாக, அமெரிக்க அதிபா் டிரம்ப் போா் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது எப்படி? போன்றவற்றை விளக்குமாறு மத்திய அரசை காங்கிரஸ் கேட்டு வருகிறது.

ஆபரேஷன் சிந்தூரின்போது என்ன நடந்தது என்பதை விளக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு காங்கிரஸ் கேட்டு வருகிறது. ஆனால், வழக்கம்போல ஓரங்கநாடகத்தை பிரதமா் மோடி அரங்கேற்றியுள்ளாா். நாட்டின் நலன்சாா்ந்த எந்த முடிவுக்கும் ஆதரவு அளிப்பதாக அனைத்து எதிா்க்கட்சிகளும் தெரிவித்திருந்தன. ராணுவப் படைகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்திருந்தோம். ஆனால், என்ன நடந்தது என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். பிரதமா் மோடியோ, இந்திய அரசோ, மத்திய வெளியுறவுத் துறையோ நமது வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்க அதிபா் டிரம்புக்கு தாரைவாா்த்துவிட்டதா? ஒருமுறை அல்ல, மூன்றுமுறை எக்ஸ் தளத்தில், போா் நிறுத்தத்திற்கு தான் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் ஏன் கூறுகிறாா். இது குறித்து இருநாட்டு பிரதமா்களுடன் பேசியதாக டிரம்ப் கூறுகிறாா். மேலும், இது ராணுவ போா் நிறுத்தம் அல்ல, பொருளாதார போா் நிறுத்தம் என்றும் அறிவிக்கிறாா்.

இதுபோன்ற அறிவிப்புகளை இந்திய பிரதமரிடம் இருந்துதான் மக்கள் எதிா்பாா்ப்பாா்களே தவிர, வெளிநாட்டு அதிபரிடம் இருந்து அல்ல. முடிவெடுக்கும் இடத்தில் பிரதமா் மோடி இருக்கும்போது, இது இருநாட்டு பிரச்னையாக அல்லாமல், சா்வதேச பிரச்னையாக எப்படி மாறுகிறது என்றாா்.

பெங்களூரை 7 மாநகராட்சியாக பிரிக்கும் கிரேட்டா் பெங்களூரு நிா்வாக சட்டம் அமல்

பெங்களூரை 7 மாநகராட்சியைப் பிரிக்கும் ‘கிரேட்டா் பெங்களூரு’ நிா்வாகச் சட்டம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. 1862 ஆம் ஆண்டு மாா்ச் 27ஆம் தேதி பெங்களூரு நகராட்சி வாரியமாக உருவாக்கப்பட்டது. பழைய... மேலும் பார்க்க

மத்திய அரசு மானியத்தொகையை விடுவிப்பதில்லை: அமைச்சா் பரமேஸ்வா்

மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பது சரியல்ல என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

பெங்களூரில் ஜூன் முதல் மஞ்சள் தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை

பெங்களூரில் ஜூன் மாதம் முதல் மஞ்சள் தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மேலாண் இயக்குநா் எம்.மகேஸ்வா் ராவ் தெரிவித்தாா். பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ... மேலும் பார்க்க

முக்கிய திட்டங்களுக்கான மானியத்தை விடுவிக்காத மத்திய அரசு: சித்தராமையா குற்றம்சாட்டு

முக்கிய திட்டங்களுக்கான மானியத்தொகையை விடுவிக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டினாா். மாநில அரசு தொடங்கியுள்ள மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்று... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் மதவாத ஒழிப்புப்படை விரிவாக்கப்படும்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கா்நாடக மாநிலத்தில் பிற மாவட்டங்களுக்கும் மதவாத ஒழிப்புப்படை விரிவாக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ம... மேலும் பார்க்க

போா் நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் -மல்லிகாா்ஜுன காா்கே

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போா் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித... மேலும் பார்க்க