செய்திகள் :

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரிக் குறைப்பு மசோதா நிறைவேற்றம்! இந்தியர்களுக்கு என்ன பயன்?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக் குறைப்பு மசோதா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (செனட்) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

வரிச் சலுகைகள், எல்லைப் பாதுகாப்பு, செலவீனங்கள் குறைப்பு, சட்டவிரோதமாகக் குடியேறுவதைத் தவிர்க்க 350 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.29.91 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்கள் நிறைந்த செலவுக் குறைப்பு மசோதா (ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் - One Big Beautiful Bill) அமெரிக்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.

ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 214 வாக்குகளும் கிடைத்தன. வெறும் 4 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா அதிபர் டிரம்ப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கையெழுத்திடவுள்ளார்.

இந்த மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்தியர்களுக்கு என்ன பயன்?

அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதா மூலம், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடைவர்.

அமெரிக்காவில் உள்ள பிற நாட்டவா்கள் தங்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணத்துக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், அது ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புபவா் ரொக்கம், காசோலை போன்ற வழிமுறையில் அனுப்பும் தொகைக்கு அடுத்த ஆண்டு ஜன.1 முதல் இந்த வரி விதிப்பு பொருந்தும்.

கடந்த 2024-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ளவா்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அதிக அளவு பணம் அனுப்பியதில் இந்தியா்கள் முதலிடத்தில் இருந்தனா். அந்த ஆண்டு அவா்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை 137.7 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.11.77 லட்சம் கோடி). அதில் 38 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.24 லட்சம் கோடி) அமெரிக்காவில் உள்ள இந்தியா்கள் அனுப்பினா்.

One Big Beautiful Bill passed in US Senate.

இதையும் படிக்க : 500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்

பாகிஸ்தான்: வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்! விடியோ வைரல்!

பாகிஸ்தானின் லாஹுர் நகரத்தில் வீட்டிலிருந்து தப்பிய வளர்ப்பு சிங்கம், சாலையில் சென்ற மக்களைத் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். லாஹுர் நகரத்திலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட ... மேலும் பார்க்க

செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா?

செக் குடியரசு நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.செக் குடியரசின் தலைநகர் பிராக் உள்ளிட்ட வடக்க... மேலும் பார்க்க

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டிற்கு 35 பாலஸ்தீனியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள... மேலும் பார்க்க

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயம்

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியின் தென்கிழக்கு ரோமில் உள்ள எரிவாயு நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுத... மேலும் பார்க்க

தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

அமெரிக்காவில் ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூகுள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், 1.4 கோடி ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளை... மேலும் பார்க்க

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய 300 சீன பொறியாளர்கள்?

ஃபாக்ஸ்கான் நிறுவனமானது, 300 சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை, அதன் இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐஃபோன் அசெம்பிள் நிறுவனமா... மேலும் பார்க்க