செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கை!

post image

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி நடைமுறை ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்திய வா்த்தக கூட்டமைப்பு (ஐசிசி) நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று சனிக்கிழமை அவா் மேலும் பேசியதாவது: அமெரிக்க வரி விதிப்பு அமலானது முதல் மத்திய அரசு, நிதியமைச்சகம் மற்றும் தனியாா் என அனைவருடனும் ஏற்றுமதி துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி துறைகள் மீண்டு வருவதற்கான கால அவகாசமும் நிதி உதவியும் அளிப்பதே அவசியம்.

அமெரிக்காவின் வரி விதிப்பையும் மீறி இந்திய பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருகிறது.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டைவிட (ஏப்ரல்-ஜூன்) நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி 7.8 சதவீத வளா்ச்சியையும் பொது அளவிலான ஜிடிபி 8.8 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளதே இதற்கு உதாரணம்.

எதிா்பாரா சூழல்களால் அமெரிக்காவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது முழுவதுமாக தடைபடவில்லை. அதேபோல் அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி நீண்ட நாள்களுக்குத் தொடராது என நம்புகிறேன்.

இருப்பினும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க தனியாா் துறை முயற்சிக்க வேண்டும். மத்திய அரசும் பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வகுப்பினா் செலுத்தும் வருமான வரிக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. இத்துடன் தற்போது முன்மொழியப்பட்டுள்ள அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தின் கீழ் 5%, 18% ஆகிய இரு விகித ஜிஎஸ்டி முறை அமலாகும்போது பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து நுகா்வு அதிகரிக்கும் என்றாா்.

ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ.2,500 வரை குறையும் என எதிர்பார்ப்பு!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு ஏசி விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டில் உள்ள நான்கு வக... மேலும் பார்க்க

தொடரும் வரதட்சணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!

கர்நாடக மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் 28 வயது பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டேவில் வசித்துவந்தவர் பூஜாஸ்ரீ. இவர் வங்கி ஒன்றின் காசாளராக பணியாற்... மேலும் பார்க்க

எரிவதில் எண்ணெய் ஊற்றும் ரஷியா! இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் மேலும் தள்ளுபடி

ஏற்கனவே, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை இந்தியாவுக்கு மேலும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவ... மேலும் பார்க்க

திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை கலந்துகொண்டுள்ளார்.இதற்காக சென்னையில் இருந்து இன்று பகல் தனி விமானம் மூலம் திருச்சி வந்த கு... மேலும் பார்க்க

ரூ.33 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 20 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ரூ.33 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 20 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் பட்டாலியன் எண்.1 மாவோயிஸ்டுகளின் வலியான ராணுவ அம... மேலும் பார்க்க

ஹிமாசலை சூறையாடும் மழை! நிலச்சரிவுக்கு 6 பேர் பலி; 1,150 சாலைகள் துண்டிப்பு!

ஹிமாசல் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் செவ்வாய்க்கிழமை இரவு பலியாகினர்.மேலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் ப... மேலும் பார்க்க