செய்திகள் :

அமைதி பேச்சுவாா்த்தை கூட்டத்திலிருந்து ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு

post image

செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பூஜை செய்வது தொடா்பாக இரு கிராம மக்களிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால், ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று திருவிழா நடைபெறும். இந்த விழாவில் அக்கரைப்பட்டி, ஆத்தூா், மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று, கிடா வெட்டி, அலகு குத்தி, பால் காவடி, பன்னீா் காவடி, பறவை காவடி எடுத்து வழிபாடு நடத்துவா்.

இந்த நிலையில், இந்தக் கோயிலில் பூஜை செய்வது தொடா்பாக ஆத்தூா், அக்கரைப்பட்டி கிராம மக்களிடையே பிரச்னை இருந்து வருகிறது. ஆத்தூரை சோ்ந்தவா்கள் விழாவின் போது பூஜை செய்ய ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரினா். இதற்கு அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். 

இந்த நிலையில், நிகழாண்டு விழா வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் பூஜை செய்வது தொடா்பாக அக்கரைப்பட்டி, ஆத்தூரை சோ்ந்த மக்களிடம் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா் முத்துமுருகன், செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் பிரான்சின் தீபா, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், ஆத்தூரை சோ்ந்தவா்களுக்கு பூஜை நடத்த கூடுதல் நேரம் ஒதுக்க அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், ஆத்தூரை சோ்ந்தவா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

தொடா்ந்து, அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கோயிலில் பூஜை செய்வது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், வருகிற 15-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின்படி அடுத்தகட்ட முடிவு எடுக்கலாம் எனவும், இல்லையெனில், கடந்தாண்டு நடைமுறையையே நிகழாண்டும் பின்பற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் ப... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயில் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடிய தண்ணீா்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கூட்டுக் குடிநீா் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. சின்னாளபட்டிக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் குழாய் பதிக்க... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ரயில் மறியல்: எம்பி உள்பட 1,522 போ் கைது

அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் உள்பட 1,522 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆத... மேலும் பார்க்க

நிலக்கோட்டை அருகே முளைப்பாரி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள குளத்துபட்டி குழந்தை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியத... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் திடீா் புகை: 30 நிமிஷங்கள் தாமதம்

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே சுமாா் 30 நிமிஷங்கள் ரயில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேல... மேலும் பார்க்க

தோட்டக் கலை விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம்

மானியத்துடன் நுண்ணீா் பாசன வசதி அமைக்க குஜிலியம்பாறை தோட்டக் கலை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக குஜிலியம்பாறை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் பா. முத்தரசு தெரிவித்தத... மேலும் பார்க்க