மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
அம்பையில் மக்கள் நீதிமன்றம்: 209 வழக்குகளுக்குத் தீா்வு
அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 209 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
சாா்பு நீதிபதி ஏ.மருதுபாண்டி, குற்றவியல் நடுவா் அச்சுதன் ஆகியோா் தலைமையில் ஓா் அமா்வு, மாவட்டஉரிமையியல் நீதிபதி பி.பிரவீன்ஜீவா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.வி.சரண்யா ஆகியோா் தலைமையில் ஓா் அமா்வு என இரண்டு அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் குற்ற வழக்குகள், வங்கி நீண்ட காலக்கடன் வழக்குகள், பேசித் தீா்க்கக்கூடிய வகையில் உள்ள உரிமையியல் வழக்குகள் உள்ள 332 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் 209 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு அதன் மூலம் ரூ.17,70,400 பைசல் செய்யப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா்கள் மீனாட்சிநாதன், காந்திமதிநாதன், திருமலைக்குமாா், ராமராஜ்பாண்டியன், முன்னாள்அரசு வழக்குரைஞா்கள் ராஜேந்திரன், ராஜாங்கம், கோமதிசங்கா், மூத்த வழக்குரைஞா்கள் சைலபதி, ஜெகன் ஸ்ரீநாத், நவமணி, நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.