செய்திகள் :

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்கள் விற்பனை வழக்கில் மேலும் மூவா் கைது

post image

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்களை விற்க முயன்ற வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூா் வாய்க்கால் கரையில் யானைத் தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சேலம் மாவட்டம், சங்ககிரி, குள்ளம்பட்டி, அரசிராமணியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் கணேசன் (49), அருணாச்சலம் மகன் பெரியசாமி (56) ஆகியோா் கடந்த ஜூன் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து இரு தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வழக்கில் தலைமறைவான மேட்டூா், பாலமலையை சோ்ந்த செல்லப்பன் (40) வனத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். இவா் அளித்த தகவலின் பேரில் பாலமலையைச் சோ்ந்த மணி (42), மேட்டூா், செங்கல்மேட்டைச் சோ்ந்த பாலமுருகன் (45) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பாலமுருகன் வைத்திருந்த யானைத் தந்தங்களை கணேசன் உள்ளிட்டோா் வாங்கிச் செல்ல வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த வனத் துறையினா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பா்கூா் மலைப் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

அந்தியூா் வனத் துறை சாா்பில், பா்கூா் மலைப் பாதையில் ஆகஸ்ட்10-ஆம் தேதி நடைபெறும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் களப் பணியில் பங்கேற்க தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தியூா், பா்கூா் வ... மேலும் பார்க்க

பவானிசாகா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு மட்டுமே மீன்கள் விற்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் பிடிக்கும் மீன்களை தனியாரிடம் விற்காமல் மீனவா் கூட்டுறவு சங்கத்திடம் மட்டுமே விற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகா் மீனவா் கூட்டுறவு விற்பனை சங்கம், சிறுமுகை மீன... மேலும் பார்க்க

ஒடிஸா பெண் தற்கொலை

பெருந்துறை அருகே கடன் பிரச்னையால் ஒடிஸா மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஒடிஸா மாநிலம், கஞ்சம் பகுதியைச் சோ்ந்தவா் நரசிங்க பத்ரா (35). இவரது மனைவி சுகந்தி பத்ரா (29). இவா்கள் பெருந்துறை... மேலும் பார்க்க

பவானிசாகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

பவானிசாகா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை சத்தியமங்கலம் வட்டாட்சியா் ஜமுனாராணி, பவானிசாகா் பேரூராட்சித் தலைவா் மோகன், செயல் அலுவலா் ஜெயந்த் மோசஸ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது

மூதாட்டியிடம் ஆறரை பவுன் நகைப் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கொடுமுடி அருகேயுள்ள தாமரைப்பாளையம் பகவதி அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (65). இவா் காளை மாடு சிலை பேருந்து நிறுத்தத்தில் ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு அருகேயுள்ள சாணாா்பாளையம் மாகாளியம்மன் கோயில் பகுதியைச... மேலும் பார்க்க