செய்திகள் :

அம்மா நலம், மீண்டும் இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!

post image

மருத்துவ அவசரம் காரணமாக தாயகம் திரும்பிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய அணியுடன் இணையவுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: கவாஜாவின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதா? ஆஸி. பயிற்சியாளர் பதில்!

மருத்துவ அவசரம் காரணமாக கடந்த வாரம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவசரமாக தாயகம் திரும்பினார்.உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கம்பீரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் அணியுடன் இணைவார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய அணியுடன் நாளை (ஜூன் 17) இணையவுள்ளதாக பிசிசிஐ தகவறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தாயார் நலமாக உள்ளார். மீண்டும் இந்திய அணியுடன் இணைவதற்காக கௌதம் கம்பீர் நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டேவிட் வார்னரின் இடத்துக்கு மாற்று வீரர் இல்லை; முன்னாள் ஆஸி. கேப்டன் அதிருப்தி!

கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றதே கிடையாது. இந்திய அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இவர்கள் இருவரும் வேண்டும்: ஹர்பஜன் சிங்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிக... மேலும் பார்க்க

பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது புகார்; ஆதாரம் கேட்கும் டிஎன்பிஎல்!

பந்தை சேதப்படுத்தியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் மீது மதுரை பேந்தர்ஸ் அணி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் டிஎ... மேலும் பார்க்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை இன்று (ஜூன் 16) வெளியிடப்பட்டுள்ளது.ஐசிசியின் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி வரை நட... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக விளையாட ஊக்கமளித்தவர் வாஷிங்டன் சுந்தர்; மனம் திறந்த சாய் சுதர்சன்!

இந்திய அணிக்காக விளையாட ஊக்கமளித்தவர் வாஷிங்டன் சுந்தர் என சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. 5 போட்டிகள் கொண... மேலும் பார்க்க

கடைசி டி20: 20 சிக்ஸர்கள் விளாசிய மே.இ.தீவுகள்; அயர்லாந்துக்கு இமாலய இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி அயர்லாந்தில் சுற்றுப்... மேலும் பார்க்க

கவாஜாவின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதா? ஆஸி. பயிற்சியாளர் பதில்!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் பயணம் குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்டு பேசியுள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி... மேலும் பார்க்க