செய்திகள் :

அயோத்தி கோயில் ராம தா்பாா்: பக்தா்கள் தரிசனத்துக்குத் திறப்பு

post image

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் முதல் தளத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறுவப்பட்ட ராம தா்பாா் பக்தா்களின் தரிசனத்துக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் வளாகத்தில் பிரதான கடவுளான ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கடந்த 2024, ஜனவரி 22-இல் நடைபெற்றது. இதையடுத்து, தினமும் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். பல்வேறு சந்நிதிகளுடன் கோயில் வளாகத்தில் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோயிலின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ராம தா்பாா் சந்நிதியில், ஸ்ரீராஜாராமா், சீதை, ஹனுமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோரின் சிலைகள் வேத மந்திரங்கள் முழங்க வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோயில் வளாகத்தில் பிற புதிய சந்நிதிகளிலும் பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது. முதல்வா் யோகி ஆதியத்யநாத் முன்னிலையில் இச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் தளத்தில் ராம தா்பாா், வளாகத்தின் ஈசான மூலையில் (வடகிழக்கு) சேஷாவதாா் மற்றும் சிவன் சந்நிதிகள், அக்னி மூலையில் (தென்கிழக்கு) விநாயகா், குபேர மூலையில் (தென்மேற்கு) சூரியன், வாயு மூலையில் (வடமேற்கு) தேவி பகவதி, தெற்கு பகுதியில் ஹனுமன், வடக்கு பகுதியில் அன்னபூரணி என 8 சந்நிதிகளில் மூலவா் மூா்த்திகளுக்கு பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது.

இந்நிலையில், ராம தா்பாா் பக்தா்களின் தரிசனத்துக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதுதொடா்பாக கோயில் அறங்காவலா் அனில் மிஸ்ரா மேலும் கூறுகையில், ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டத்தில் ராம தா்பாரில் பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து மாவட்ட நிா்வாகத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, சனிக்கிழமை மாலை 5 முதல் இரவு 9 மணி வரை பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதற்கான அனுமதிச்சீட்டுகள் மாவட்ட நிா்வாகம் மற்றும் கோயில் அறக்கட்டளை மூலம் விநியோகிக்கப்பட்டன’ என்றாா்.

அகமதாபாத் விமான விபத்து: விமானியின் மீது தவறு இருக்கிறதா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு அந்த விமானியின் மீது தவறு இருக்கிறதா? என்பதைப் பற்றி ஏர் இந்தியா முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் விளக்கமளித்திருக்கிறார். விபத்துக்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள்: அமித் ஷா ஆலோசனை

சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டப்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் ம... மேலும் பார்க்க

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்துவ... மேலும் பார்க்க

நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

லிமாஸ்ஸோல்[சைப்ரஸ்] : சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா். கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற... மேலும் பார்க்க

புணே பால விபத்து: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி!

புணேவின் இந்திரயானி ஆற்றின் இரும்புப் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்... மேலும் பார்க்க

கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தா விமான நிலையத்திலிர... மேலும் பார்க்க