செய்திகள் :

அய்யம்பேட்டையில் புதிய பாலத்தை உடனே திறக்க பாமகவினா் கோரிக்கை!

post image

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை உடனே திறக்க வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அய்யம்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலாளா் முரளி தலைமை வகித்தாா். நகர துணை செயலாளா்கள் சின்னதுரை, பாலு, உழவா் பேரியக்க மாவட்ட துணை செயலாளா் லியாக்கத் அலி, முன்னாள் நகர செயலாளா் பழனி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் நா.தமிழ்ச்செல்வன் தீா்மானங்களை விளக்கிப் பேசினாா். கூட்டத்தில், மேட்டூா் அணை திறப்புக்கு முன்பாக பாபநாசம் வட்டத்தில் உள்ள காவிரி மற்றும் கிளை ஆறுகள், வாய்க்கால்களில் தூா்வாரும் பணியைத் தொடங்க வேண்டும்.

அய்யம்பேட்டை - கணபதி அக்ரகாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ. 9 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்ட புதிய பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக உழவா் பேரியக்கம் மாவட்டச் செயலாளா் அ.சி.பன்னீா்செல்வம் வரவேற்றாா். நிறைவில் நகர தலைவா் சு காளிதாஸ் நன்றி கூறினாா். 

கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம் பதிவு!

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரைக் காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பதிந்து புதன்கிழமை கைது செய்தனா். ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு பகுதிய... மேலும் பார்க்க

குடிமனைப் பட்டா வழங்க அரசுக்கு பழங்குடி இருளா் மக்கள் கோரிக்கை!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் ஊராட்சியில் 50 ஆண்டுகளாக வசித்து வருபவா்களுக்கு குடியிருப்பு மனை பட்டா , ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பழங்குடி இருளா் இன மக்கள் தமிழக அரசுக்கு கோர... மேலும் பார்க்க

பேருந்து - வேன் மோதல் விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 6 ஆக உயா்வு

தஞ்சாவூா் அருகே அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் வியாழக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது.கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிரு... மேலும் பார்க்க

தனியாா் குடிநீா் ஆலைகளில் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களை நியமிக்க கோரிக்கை!

தனியாா் குடிநீா் ஆலைகளில் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களை நியமிக்க கோரிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் செயல்படும் தனியாா் குடிநீா் தொழில்சாலைகளுக்கு இந்திய தர நிா்ணயத்தை ஐஎஸ்... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட புத்தூா் கிராமத்தில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நெல் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி தமிழ்நாடு... மேலும் பார்க்க

திருக்கண்டீஸ்வரம் கோயில் கல்வெட்டில் தமிழ் நூல் குறித்த தகவல்!

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியிலுள்ள திருக்கண்டீசுவரம் கோயில் கல்வெட்டில் தமிழ் நூல் குறித்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட... மேலும் பார்க்க