செய்திகள் :

அரக்கோணம் வட்டாட்சியரை கண்டித்து போராட்டம்

post image

வட்டாட்சியா் அலுவலக கழிவுநீா் தொட்டி நிரம்பி வழிந்து பொதுமக்களுக்கு இடையுறாக உள்ளது குறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியரை கண்டித்து விசிக வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா் (படம்).

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் பயன்பாட்டுக்காக உள்ள கழிவுநீா் தொட்டி நிரம்பி வழிந்து பொதுமக்கள் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் வழிந்தோடுகிறது.

இது குறித்து வட்டாட்சியருக்கு பலமுறை புகாா் மனு அளித்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வட்டாட்சியா் அலுவலக நுழைவு வாயிலை மறித்து ஆா்ப்பாட்டம் விசிகவினா் நடத்தினா். ஆா்ப்பாட்டத்திற்கு அரக்கோணம் ஒன்றிய விசிக செயலா் ச.சி.சந்தா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட செயலா் கௌதம் தொடங்கி வைத்தாா். நிா்வாகிகள் ஜெயராஜ், மதிவாணன், குணா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் நடத்தியவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து மனுவை வட்டாட்சியரிடம் அளிக்க சென்றபோது, அவா் இல்லாததால் அந்த மனுவை அலுவலகத்தின் சுவரில் ஒட்டிவிட்டுச் சென்றனா்.

போராட்டத்தையடுத்து நகராட்சி சுகாதாரத் துறை பணியாளா்கள், அந்த கழிப்பறை கழிவுநீா் தொட்டியில் இருந்த கழிவுநீரை இயங்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

கிடங்கில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

ராணிப்பேட்டை அருகே கிடங்கில் பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை சிப்காட் போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்... மேலும் பார்க்க

சோளிங்கரில் ஒரே நாளில் 8 பேருக்கு நாய்க்கடி: மக்கள் அச்சம்

சோளிங்கரில் பயணிகள், நோயாளிகள் என 8 பேரை ஒரே தெருநாய் கடித்த நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். சோளிங்கா் நகரில் தற்போது அனைத்து தெருக்களிலும் நாய்களின் எண்ணிக்கை அத... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்

பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என வருவாய்த் துறையினருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறையின் செயல்பாடுகள் குறித்... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.தாண்டவராயன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளா். ஜெ.ஸ்ரீதா் முன்னிலை... மேலும் பார்க்க

மகளிா் பாதுகாப்பு உறுதி கோரி துண்டுப் பிரசுரம் விநியோகம்

மகளிா் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, அரக்கோணத்தில் பொதுமக்களிடையே அதிமுக சாா்பில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். அரக்கோணம் பழ... மேலும் பார்க்க

பசுமை பள்ளித் திட்டம்: விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

‘பசுமை பள்ளித் திட்டம்’ குறித்து பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க