செய்திகள் :

அரசினா் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

post image

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சாா்பில், 30 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கல்லுாரி பொறுப்பு முதல்வா் சீ. தங்கராசு தலைமை வகித்தாா். கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரி, அரசு மகளிா் கலைக் கல்லூரி, இதயா மகளிா் கல்லூரி, மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி மற்றும் திருவாரூா் மாவட்டத்தின் சாா்பில் குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கூத்தாநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் மஞ்சக்குடி தயானந்தா கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களிடம் நோ்காணல் நடத்தி 438 போ் தோ்வு பெற்று பல்வேறு நிறுவனங்கள் மூலமாக பணி நியமன கடிதம் பெற்றனா்.

ஏற்பாடுகளை நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சா. சரவணன், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் சா. ரமேஷ் மற்றும் துறைத் தலைவா்கள் செய்தனா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க