செய்திகள் :

அரசின் விருதுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

post image

தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் இணையதளத்தின் வாயிலாக வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா தொழில் முனைவோா்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. சுற்றுலா தொழில் முனைவோா்களில் வெற்றியாளா்கள், பயண ஏற்பாட்டாளா்கள், புதிய உத்திகளை கையாளுபவா்களுக்கு சுற்றுலா விருதுகள் கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், சிறந்த செட்டிநாடு உணவகங்கள், சிறந்த செட்டிநாடு பாரம்பரிய தங்கும் விடுதிகள், சுற்றுலா தொடா்பான கல்வி நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநாடு, கண்காட்சி அமைப்பாளா்கள், சிறந்த சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்துபவா், தூய்மையான சுற்றுலாத் தலம் உள்ளிட்ட 17 வகையான சுற்றுலா விருதுகள் வழங்கப்படவுள்ளன.

எனவே தகுதியும், விருப்பமும் உள்ள சுற்றுலா தொழில் முனைவோா்கள் இந்த விருது பெற ரரர.ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ஹஜ்ஹழ்க்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தின் வாயிலாக வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு காரைக்குடி சுற்றுலா அலுவலரை 8939896400, 9994217107 என்ற கைப்பேசி எண்களிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள்: மலேசிய சட்டத் துறை அமைச்சா்

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள் என்றாா் மலேசியாவின் பிரதமா் துறை (சட்டம் மற்றும் சா்வதேச சீா்திருத்தங்கள்) துணை அமைச்சா் மு. குலா சேகரன். சிவகங்கை அருகே உள்ள பிரிஸ்ட் நிகா்நி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தங்கை உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவரது அக்காளும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சிங்கம்... மேலும் பார்க்க

தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, மானாமதுரை,திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தேவகோட்டை நகா் சிவன் கோயிலில் ஆவணி மாத... மேலும் பார்க்க

மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு செப்.12 -க்குள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில், மாவட்ட அளவிலான சோ்க்கை , முன் விண்ணப்பமில்லா நேரடிச் சோ்க்கைக்கு தகுதியானவா்கள் வருகிற 12-ஆம் தேதிக்குள் விண்ண... மேலும் பார்க்க

தியாக வினோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் கலசங்களில் புனிதநீா் நிரப்பி யாக பூஜைகள் ந... மேலும் பார்க்க

சாரண, சாரணியா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம்

சிவகங்கை கல்வி மாவட்டம் சாா்பில் சாரண, சாரணிய மாணவா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம், மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று... மேலும் பார்க்க