செய்திகள் :

"அரசியல் இருக்காது என்று நம்பினோம்; ஆனால்..." - முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆர்.பி.உதயகுமார்

post image

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வெளியான வீடியோ சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், "முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். அறிஞர் அண்ணாவின் மாற்றான் தோட்ட மல்லிகைக்கும் மனமுண்டு எனும் கூற்றின் அடிப்படையிலும், முருக பக்தர்கள் என்ற அடிப்படையில்தான் மாநாட்டில் பங்கேற்றோம். அதில் அரசியல் இருக்காது என்று நம்பினோம்.

முருக பக்தர்கள் மாநாடு
முருக பக்தர்கள் மாநாடு

மாநாட்டில் ஒளிப்பரப்பட்ட வீடியோவில் பெரியார், அண்ணாவை அவதூறு செய்ததாகத் தகவல் வந்துள்ளது. அ.தி.மு.க ஒரு நாளும் கொள்கையை, கோட்பாட்டை, லட்சியத்தை விட்டுக் கொடுக்காது.

அண்ணாவை, ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதற்காகக் கடந்த காலத்தில் என்ன முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தி.மு.க போல எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி தக்க வைக்க மாட்டார். பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருந்த போது மக்களுக்குத் தேவையான திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி கேட்டுப் பெற்றுத் தந்துள்ளார்.

தற்போது மக்கள் நலனுக்காக பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

நாங்கள் அந்த வீடியோ ஒளிப்பரப்பட்டதைப் பார்க்கவில்லை. திரைக்குப் பின்புறம் அமர்ந்து இருந்ததால் பார்க்க முடியவில்லை. பெரியார், அண்ணா குறித்த அவதூறு கருத்துக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டின் தீர்மானம், உறுதிமொழிகளை அ.தி.மு.க ஒரு போதும் ஏற்காது" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"சமஸ்கிருத வெறி; தமிழை விட 22 மடங்கு அதிகம்; 'ரூ.2500 கோடி' ஒதுக்கிய பாஜக அரசு' - சு.வெ காட்டம்!

"பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்... மேலும் பார்க்க

``இஸ்ரேல் ஈரான் போர் நிறுத்தம்; ஆனால் காஸா விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனம்..." - காங்கிரஸ்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் அபாயம் ஏற்பட்டத... மேலும் பார்க்க

சீனாவில் முடங்கி கிடக்கும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் - தாமதமாகும் புல்லட் ரயில் திட்டம்?

மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரை புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஜப்பான் நாட்டின் தொழில் நுட்பம் மற்றும் நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்டு வரும் இத்திட்டத்திற்கான பணிகள்... மேலும் பார்க்க

``ஈரானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" - ஈரான் போர் நிறுத்தம் குறித்து எம்.பி சஞ்சய் ராவத்

அணுஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய இஸ்ரேல் அதை தடுக்கப்போவதாக ஈரான் மீது போர் தொடுத்தது. இஸ்ரேலின் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது எனத் தெரிந்தும் இஸ்ரேலுக்கு உடனடியாக பதில் தாக்குதல் கொ... மேலும் பார்க்க

`முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட வழிகாட்டிகளை இழிவுபடுத்தியது கண்டனத்துக்குரியது'- டிடிவி தினகரன்

சேலத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து மக்கள் முன்னணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுத்தார்... மேலும் பார்க்க

ஈரானின் அணுசக்தி திட்டம்: அமெரிக்க இஸ்ரேலின் கவலைகளும், ஈரானின் பிடிவாதமும் | களம் 4: Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவைகட்டுரையாளர்:... மேலும் பார்க்க