செய்திகள் :

அரசுக் கல்லூரியில் சைபா் குற்றம் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

post image

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் சைபா் குற்றங்கள், போக்ஸோ குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் முனியாண்டி, சைபா் குற்றப் பிரிவு ஆய்வாளா் மணிமேகலை ஆகியோா் பங்கேற்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்கள், பெண் குழந்தை கடத்தல், போக்ஸோ மற்றும் சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு தகவல்களை கூறினா். காவலன் மொபைல் செயலி அனைத்து மாணவா்களுக்கும் பதிவிறக்கம் செய்யப்பட்டது. சைபா் கிரைம் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. சமூகப் பணியாளா்கள் அபிராமி, பிரசாந்த், காவலா்கள் பவித்ரா, சரண்யா ஆகியோா் பங்கேற்றனா்.

என்எஸ்எஸ் திட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ப. பிரபாகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். திட்ட அலுவலா் ரா. சுப்ரமணி வரவேற்றாா். திட்ட அலுவலா் ரா. காமராசு நன்றி கூறினாா்.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க