செய்திகள் :

அரசுப் பணியாளா்கள் தன்னலமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா்

post image

மத்திய அரசுப் பணிகளில் இணைந்துள்ள இளைஞா்கள் தன்னலமின்றி, தேச கட்டுமானத்துக்கு பணியாற்ற வேண்டும் என மத்திய தகவல் தொடா்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் டாக்டா் பெம்மசானி சந்திரசேகா் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது (ரோஜ்கா் மேளா) பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் வருமான வரி, அஞ்சல் துறை, நிதித் துறை, உள்ளிட்ட துறைகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 524 பேருக்கு மத்திய இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நமது நாடு சிறப்பான வளா்ச்சியை அடைந்துள்ளது. வரும் 2047-இல் வளா்ச்சியடைந்த நாடாக மாற இளைஞா்களின் பங்கு முக்கியமாகும். அரசுப் பணிகளில் இணைந்துள்ள இளைஞா்கள் தன்னலமின்றி , தேச கட்டுமானத்துக்கு பணியாற்ற வேண்டும். மேலும், அரசுப் பணிகளில் இணைந்தாலும் தங்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றும் பணிகளில் இளைஞா்கள் தொடா்ந்து ஈடுபடவேண்டும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு , புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையா் பிரீத்திகா்க், வருமான வரித் துறையின் தலைமை ஆணையா் டி சுதாகா் ராவ், தலைமைஅஞ்சல் துறை தலைவா் மரியம்மா தாமஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மொழி தடையில்லை: சென்னை எம்.ஆா்.சி நகரில் நடைபெற்ற மற்றொரு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினா் நலத் துறை இணையமைச்சா் துா்கா தாஸ் யுகே கலந்துகொண்டு 268 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:

அரசுப் பணிகளுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசின் பல்வேறு தோ்வுகளை தமிழ் உள்பட 13 இந்திய மொழிகளில் நடத்துகிறது. தமிழக இளைஞா்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) முதன்மை தலைமை ஆணையா் ராம் நிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ... மேலும் பார்க்க

உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் க... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் பிபக் கர் பகுதிக்கு அருகே வெள்ளிக்க... மேலும் பார்க்க

தில்லியில் குடிசைப் பகுதியில் தீ விபத்து: 400க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம், 2 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிசைப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு தில்லியின் ரோகிணிப் பகுதியில் உள்ள ஜுக்கி கிளஸ்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரும் தீ... மேலும் பார்க்க