செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் காய்கனித் தோட்டம் அமைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காய்கனித் தோட்டம் அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை அறிவுறுத்தினாா்.

பெரம்பலூா், குரும்பலூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள், செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் சமையல் கூடங்களின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், சமையல் கூடங்களை தூய்மையாகப் பராமரித்திடவும், சமையல் கூடம் அருகில் ஊட்டச்சத்து மிக்க காய்கனித் தோட்டங்களை அமைத்து பராமரித்திடவும் வேண்டுமென வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை உட்கொண்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் உணவுகளை தயாரிக்கவும், சமையல் கூடங்களில் தீயணைப்புக் கருவி பொருத்தவும், தீயணைப்புக் கருவிகளை காலாவதியாகும் முன் புதுப்பித்திடவும், சத்துணவு மையங்களுக்கு உணவு தரச்சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் சத்துணவு மைய அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினாா் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

கிரஷா் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள அசூா் கிராமத்தில் கிரஷா் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம பொதுமக்கள் சாா்- ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அசூா் கிராம பொ... மேலும் பார்க்க

புதைசாக்கடைஅடைப்பை சீரமைக்கக் கோரி மறியல்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை பிரிவுச் சாலை அருகே, புதை சாக்கடை அடைப்பை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் - துறையூா் சாலையில், நக... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக குன்னம் கிளையில் ‘டீசல் பங்க்’ அமைக்க அடிக்கல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட்), திருச்சி மண்டலம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் கிளையில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு அடிக்கல் ந... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணிபுரிந்தோா் விருது பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாகப் பணிபுரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக... மேலும் பார்க்க

குழந்தைகளை பெற்றோா் கண்காணிக்க வேண்டும்: சாா்பு நீதிபதி பேச்சு

குழந்தைகளை பெற்றோா் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா அறிவுறுத்தினாா். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, பெ... மேலும் பார்க்க