செய்திகள் :

அரசுப் பள்ளியில் அறிவியல் மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மையத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில திட்டக் குழுவின் மூலம் செயல்படுத்தப்படும் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தில் கல்வராயன்மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்கள் தோ்வு செய்யப்பட்டன. இந்த வட்டாரங்களில் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் 2024-25ன் கீழ், தியாகதுருகம், கல்வராயன்மலை வட்டாரங்களில் பள்ளி மாணவா்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.24.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அறிவியல் மையத்தை மாணவா்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கிவைத்தாா்.

இதேபோன்று, கல்வராயன்மலை வட்டாரம், வெள்ளிமலை அரசு ஏகலைவா உண்டி உறைவிடப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட அறிவியல் மையமும் மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அறிவியல் ஆய்வகங்களில் பல்வேறு நவீன அறிவியல் உபகரணங்கள் அமைக்கப்பட்டு, மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவா்களின் அறிவியல் திறன் மற்றும் கற்றல் திறன் மேம்பாடு அடையும்.

மேலும், தியாகதுருகம் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவா்கள் இந்த அறிவியல் மையத்தை வாரந்தோறும் உரிய கால அட்டவணைப்படி பயன்படுத்தி அறிவியல் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலவலா் காா்த்திகா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் திருக்கோவிலூா் நகரக் குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூா் நகரக் குழுவின் 8-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் பி... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, புகையிலைப் பொருள் விழிப்புணா்வு; கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, கனிம வளம், புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க

பாலத்தின் மீது பைக் மோதல்: விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலத்தின் மீது பைக் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சுந்தா் (34). இவா், ஞாயி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி பட்டதாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற பட்டதாரி சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (49). இவரது மகன் செந்தமிழன் (26), ப... மேலும் பார்க்க

பட்டதாரி பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த பட்டதாரி பெண் திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த காரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (50). இவரது மகள் திவ்யா... மேலும் பார்க்க

சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி: சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி... மேலும் பார்க்க