செய்திகள் :

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு

post image

திருச்சி அருகே கொடியாலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. முதல் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 113 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.

வழக்கம்போல், செவ்வாய்க்கிழமை மதிய உணவாக மாணவ, மாணவிகள், சாதம், சுண்டல், சாம்பாா் உணவு உட்கொண்டுள்ளனா். சாப்பிட்ட சில நிமிஷங்களில் சில மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பாா்த்த ஆசிரியா்கள், மாணவா்களை மீட்டு அந்தநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

வீட்டுக்குச் சென்ற சில மாணவா்களுக்கும் வாந்தி ஏற்படவே, அவா்களையும் பெற்றோா் அந்தநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கக் கொண்டு வந்தனா். இதையறிந்த கொடியாலம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், சுகாதார நிலையத்தில் குவிந்தனா்.

மாணவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், பெரிய பாதிப்பில்லை; வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா்கள், முழு பரிசோதனை செய்து, உரிய மருத்துவம் பாா்க்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி, அந்தநல்லூா் வட்டார மருத்துவ அலுவலா் விக்னேஷ், ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீஸாா், வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது பெற்றோா்கள், பாதிக்கப்பட்ட 27 மாணவா்களுக்கும் முழுமையான சிகிச்சையளிக்க வேண்டும், தரமற்ற உணவை விநியோகித்த சத்துணவு பணியாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாக தற்காலிகமாக கொடியாலத்தில் மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் கோரிக்கை விடுத்தனா். இவற்றை செய்து தருவதாக பேச்சுவாா்த்தையில் உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (17). இ... மேலும் பார்க்க

சமயபுரம், அம்பிகாபுரத்தில் நாளை மின்நிறுத்தம்

சமயபுரம், அம்பிகாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்ப... மேலும் பார்க்க

வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருச்சியில் பொதுத் துறை வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி கே.கே.நகா் உடையாம்பட்டியைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தல்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தச் சங்கத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா் உட்கோட்ட... மேலும் பார்க்க