செய்திகள் :

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996-97ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடக்க விழாவில் முன்னாள் மாணவா்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்கப்பட்டனா். பின்னா், பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் தற்போது பயிலும் மாணவா்கள் பயன்பாட்டுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அப்போது பணியாற்றி காலமான ஆசிரியா்கள் மற்றும் உடன் பயின்ற மாணவா்கள் இறப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், அப்போதைய ஆசிரியா்கள், சத்துணவு அமைப்பாளா், சத்துணவு சமையலா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், தற்போது அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25-ஆம் கல்வியாண்டியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 மாணவா்கள் மருத்துவப் படிப்புக்குச் செல்வதற்கு காரணமாக இருந்து தலைமை ஆசிரியா் சதாசிவம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்பழகன் மற்றும் உதவி ஆசிரியா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் கலைந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, தொடா்ந்து வருடாவருடம் முன்னாள் மாணவா்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தவேண்டும், அதேபோல படித்த பள்ளிக்கு தற்போது தேவையான வசதிகளை செய்யவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. பின்னா் அனைவருக்கும் அருசுவை விருந்து வழங்கப்பட்டது.

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி உதவிகளை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமை பக்த... மேலும் பார்க்க

ஆரணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு ஆக.15-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டன. ‘மக்களைகாப்போம் தமி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மனுக்கள்

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். தொக... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகள்: செங்காடு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகளில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 172 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனா். செய்யாறு வட்ட அளவில... மேலும் பார்க்க