அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்
அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா்.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி சென்ற அரசு நகரப் பேருந்தை வழிமறித்த மா்மநபா்கள், அதில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை தீ வைத்து எரித்தனா்.
திருநெல்வேலியைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி பேராசிரியா் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து இச்சம்பவம் நடைபெற்ாக ராக்கெட் ராஜா மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ராக்கெட் ராஜா உள்பட 4 போ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினா்.
இதையொட்டி நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் போடப்பட்டிருந்தது.